சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவா(31). இவரது மனைவி பிருந்தா. இவரை இளம்பிள்ளை அருகே உள்ள மாட்டையாம்பட்டியை சேர்ந்த தறிபட்டறை உரிமையாளர் சுப்பிரமணி(32), கூட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நேற்று சிவா, பிருந்தா ஆகிய இருவரையும் மேச்சேரி காவல் நிலையம் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பிருந்தா சுப்பிரமணியுடன் தான் வாழ்வேன் என கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் சிவா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் மாட்டையாம்பட்டியில் உள்ள சுப்பிரமணியன் வீட்டிற்கு நேற்று அதிகாலை வந்துள்ளனர்.
அங்கு வீட்டு வாசலில் படுத்திருந்தவரை கத்தியால் வெட்டி உள்ளனர். கை கால்களில் வெட்டு விழுந்த நிலையில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அப்போது வெட்டப்பட்டவர் சுப்பிரமணி இல்லை என்பதும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தறித்தொழிலாளி இருசாக்கவுண்டர் (42) என்பதும் தெரியவந்தது.
உடனே 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தறி தொழிலாளியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அடுத்தவரின் மனைவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சுப்பிரமணிக்கு பதில் ஆள் மாறி பக்கத்து வீட்டைச் சேர்ந்த தறித் தொழிலாளி இருசாக்கவுண்டரை முதல் கணவர் சிவா உள்ளிட்டோர் வெட்டியது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து முதல் கணவர் சிவா(31), அவரது தம்பி குமார்(28), நண்பர்கள் வசந்தகுமார்(28), சக்திவேல்(26) ஆகிய நான்கு பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பிள்ளை அருகே மனைவியை திருமணம் செய்து கொண்ட காதலனுக்கு பதில், ஆள்மாறி தறித்தொழிலாளியை வெட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
நெல்லை , ஜூலை 1: நெல்லை மாவட்டத்தின் பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவை மிக அதிக வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அனல் மின் நிலையங்கள் மற்றும் கூடங்குளம்… Read more: ஆந்திரா, கர்நாடகாவை முந்திய தமிழகம்: காற்றாலை மின் உற்பத்தியில் புதிய வரலாற்று சாதனை!
சென்னை , ஜூன் 30 : சமூக ஊடகங்களில் பரவி வரும் ரீல்ஸ் மோகம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக மாறி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கத் தமிழக சுகாதாரத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. தங்களின் சுய விளம்பரத்திற்காகவும் சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காகவும் பொது இடங்களைச் சற்றும் மதிக்காமல் செயல்படும் நபர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இரயில் நிலையங்கள், பேருந்து… Read more: அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுக்க தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை , ஜூன் 30: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மோசடித் தொகை இருநூறு கோடி ரூபாயைத் தாண்டும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக வாக்குமூலம் பெற்று வரும் நிலையில் இந்த வழக்கின்… Read more: பள்ளி அங்கீகார மோசடி: ரூ.200 கோடியைத் தாண்டும் திடுக்கிடும் பின்னணி
சென்னை , ஜூன் 20 : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் குற்றவாளிகளைக் கண்காணித்து ஒடுக்கவும் “வண்ணக் குறியீட்டுடன் கூடிய புதிய வகைப்பாட்டு முறைய” (Color-Coded Classification System) மாநிலக் காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களின் தீவிரம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் எட்டு வெவ்வேறு வண்ணப் பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான… Read more: பாலியல் குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது! 8 கலர் திட்டம் அறிமுகம் செய்த TN போலீஸின் அதிரடி ஸ்கெட்ச்!!
சென்னை , ஜூன் 30: தமிழகத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்று கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க அரசு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையைத் தாண்டி கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது… Read more: தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டண முறைகேடு? புகார்கள் குவிந்ததால் முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை
சென்னை , ஜூன் 29 : தமிழகத்தில் போதையற்ற சூழலை உருவாக்குவதற்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் தேவையான அனைத்துக் கடுமையான நடவடிக்கைகளையும் எவ்வித சமரசமுமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இந்த முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை முழுமையான கவனத்தைச் செலுத்த வேண்டும்… Read more: ‘சட்டப்படி மட்டும் செயல்படுங்கள்’… காவல்துறைக்கு முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments