Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சென்னையில் கிரேன் மூலம் ரூ.20 லட்சம் மின்கேபிள்கள் திருட்டு: ஒருவர் கைது! மூன்று பேர் தலைமறைவு !

Chennai Crane-Assisted Cable Theft: ₹20 Lakh Worth of Electricity Cables Stolen, One Arrested, Three Absconding

சென்னை, ஜூன் 23: சென்னை பல்லாவரத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார கேபிள்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் திருடிச் சென்ற துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…

டெல்லியில் குழந்தைகள் கடத்தல் அதிர்ச்சி: 30 குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி கோடிகளில் விற்ற நெட்வொர்க்!

Delhi Child Trafficking Shock: Network Bought 30 Children for Low Prices and Sold Them for Crores Across India

டெல்லி , ஜூன் 23: வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர்களைக் குறிவைத்து, அவர்களிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்குக் குழந்தைகளைப் பெற்று, பின்னர் குழந்தை இல்லாத பணக்கார தம்பதியினருக்குப் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த பெரும் கடத்தல் நெட்வொர்க்கை டெல்லி காவல்துறை அதிரடியாக முறியடித்துள்ளது. இதுவரை இந்தச் கும்பலால் சுமார் 30 குழந்தைகள்…

கத்தார் இயற்கை எரிவாயு  விபத்தில் நெல்லை இளைஞர் பலி.. 12 இந்தியர்கள் உயிரிழப்பு; இருவரின் நிலை தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பு

Qatar Natural Gas Plant Tragedy: Tirunelveli Youth Dies, 12 Indians Killed, Two Still Missing as Families Await Answers

நெல்லை , ஜூன் 23:மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடங்குவார் என்ற செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே தொழிற்சாலையில் பணியாற்றிய மாவட்டத்தைச் சேர்ந்த பிற இரு இளைஞர்களின்…

TN Assembly : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை “வெளியேறிய திமுக… இனி ‘பேசவில்லை’ என்று சொல்ல உரிமையில்லை அரசியல் விமர்சகர் கண்டனம் !

Tamil Nadu Assembly: CM Vijay Issues Strong Warning, Says "We Will Fill the Treasury and Spare No One" During Fiery Speech

சென்னை , ஜூன் 23: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “நாங்கள் பேசத் தொடங்கினால் எதிர்க்கட்சிகள் எங்களைப் பேச விடுவதில்லை” என்று முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் நியாயமானது என்று அரசியல் விமர்சகர் நந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.…

TN Assembly : கஜானாவை நிரப்புவோம்; “தொட்டா விட மாட்டோம்.. தொட்டவங்களையும் விடமாட்டோம்!” – முதல்வர் விஜயின் ஆக்ரோஷ எச்சரிக்கை 

Tamil Nadu Assembly: CM Vijay Issues Strong Warning, Says "We Will Fill the Treasury and Spare No One" During Fiery Speech

சென்னை , ஜூன் 23: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் ஆக்ரோஷமாக உரையாற்றினார். அப்போது எதிர்கட்சியான திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் உரையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், கடந்த கால ஊழல்களையும், தற்போதைய அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசினார்.…

பாலிடெக்னிக் தேர்வு மோசடி: சென்னை முதல் மதுரை வரை ED அதிரடி ரெய்டு.. 2017 விவகாரம் மீண்டும் பரபரப்பு!

Polytechnic Exam Scam: ED Conducts Massive Raids from Chennai to Madurai Over 2017 Recruitment Fraud Investigation

சென்னை , ஜூன் 23 : தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 18…

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயருமா? – முக்கிய விபரம்

Will Electricity Tariff Increase in Tamil Nadu from July 1? Key Details Every Consumer Should Know

சென்னை , ஜூன் 23: தமிழகத்தில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்த நிலையில் தற்போதைய சூழலில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) நிர்வாகக் கட்டமைப்பு காலியாக இருப்பதும் மின்வாரியம்…

“விஜய் கால்ஷீட் கொடுக்க 3 கண்டிஷன் போடுவாங்க ..!” இயக்குநர் பேரரசு உடைத்த அதிர்ச்சி ரகசியம்

Director Perarasu Reveals Vijay's 3 Strict Conditions Before Giving Movie Call Sheets

சினிமா செய்தி , ஜூன் 23: திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு நகர்ந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை இயக்குநர் பேரரசு பகிர்ந்துள்ளார். தொடக்க காலத்தில் இருந்தே மக்கள் மற்றும் ரசிகர்களுடன் விஜய் பேணி வந்த நெருக்கமான உறவே அவரை இன்று இந்த உயரிய நிலைக்குக்…

TN ASSEMBLY: சட்டசபையில் உதயநிதி பொய் புகார் கூறி ஓட்டம்? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு சென்ற நிறுவனங்கள் எவை? கீர்த்தனா வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் முழு விவரம்

TN Assembly: Keerthana Alleges Udhayanidhi Made False Claims, Reveals List of Companies That Left Tamil Nadu Under DMK Rule

சென்னை , ஜூன் 22: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதாரமற்ற ஒற்றை வரிப் புகாரைக் கூறிவிட்டு உண்மை தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவையிலிருந்து ஓடிவிட்டதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்குச்…

ஓசூரில் வெறி நாய் கடித்து 2 பெண்கள் உட்பட 12 பேர் காயம்: மக்கள் அச்சம்

ஓசூர் , ஜூன் 22: ஓசூரில் பல்வேறு பகுதிகளில் தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று, இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை துரத்தித் துரத்திக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, ஆர்.சி சர்ச் பகுதி…