நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும் மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி,கொள்ளை மற்றும்…












