சென்னை , மே 9 : TVK விஜய்க்கு VCK, CPI, CPM, IUML உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, TVK தலைவர் Vijay தலைமையிலான அணிக்கு பெரும்பான்மை கிடைத்ததாக வெளியாகிய தகவல்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக VCK, CPI, CPM மற்றும் IUML உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுவது, தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளை உருவாக்கியுள்ளது.
118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது 120 எம்எல்ஏக்கள் ஆதரவு TVK அணிக்கு கிடைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் “விஜய் முதல்வராகிறாரா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்கிலும் தீவிரமாக பேசப்படுகிறது.
முதலில் VCK தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து IUML-வும் TVK அணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பே CPI மற்றும் CPM உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் TVK அணியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ள நிலையில் . TVK தரப்பில் மொத்த ஆதரவு எண்ணிக்கை 107-இல் இருந்து 120 ஆக உயர்ந்துள்ளதது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கடந்துவிட்டதால், ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக TVK ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் புதிய தலைமுறை மாற்றத்தை எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மத்தியில் இந்த தகவல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக “முதல்வராகிறார் விஜய்” என்ற வாசகம் X, YouTube, Facebook உள்ளிட்ட தளங்களில் வேகமாக டிரெண்டாகி வருகிறது.
அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பு, யார் யாருடன் இணையப் போகிறார்கள் என்ற கேள்வி, பெரும்பான்மை எவ்வாறு உருவாகும் என்ற கணக்கீடு ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக தீவிரமாக பேசப்பட்டு வந்தன. அந்த சூழலிலேயே VCK மற்றும் IUML ஆதரவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்கா?
TVK அணியுடன் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன என்ற தகவல் வெளியாகியிருப்பது, எதிர்கால கூட்டணி அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுவரை சினிமா மற்றும் மக்கள் செல்வாக்கை அரசியல் பலமாக மாற்ற முயன்ற Vijay, தற்போது கூட்டணி அரசியலிலும் முக்கிய பங்காளியாக மாறியிருக்கிறார் என்ற பார்வையும் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், இந்த ஆதரவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தெளிவான நிலைப்பாடுகள் வெளியாகுமா என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் TVK அலை
“TVK Majority”, “CM Vijay”, “Tamil Nadu Politics”, “Vijay CM” போன்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments