Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சாதித்து அரசு அதிகாரியானார்

Kumbakonam School Fire Survivor Clears Group 1 Exam and Becomes Government Officer

தஞ்சாவூர் ,ஜூன் 17 : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவி,22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து அரசு அதிகாரியாக சாதனை படைத்துள்ளார். அவர் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராக (ஏ.டி. பஞ்சாயத்து) விரைவில் பொறுப்பேற்க…

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார்…

நடிகை கௌதமியின் பகீர் புகார்: அதிரடியாக களமிறங்கிய அமலாக்க துறை … என்ன நடந்தது?

Actress Gautami files shocking complaint as Enforcement Directorate launches action over alleged fraud case

சென்னை  ,ஜூன் 17  : தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கௌதமி. இவர் தனக்குச் சொந்தமான சொத்துகளை அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களை அளித்திருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஏழு…

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை

கோவில்பட்டி  ,ஜூன் 16 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ,பொதுமக்களுக்கு இட்லி வழங்காமல் தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த உணவகத்தில் ,முறைகேடுகள் தங்குதடையின்றி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…

தமிழ்நாடு நிதி நிலைமை: முந்தைய அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ₹13.18 லட்சம் கோடி கடனில் தவிக்கும் தமிழகம் – வெள்ளை அறிக்கை தரும் அதிரடி உண்மைகள்!

Tamil Nadu Financial Crisis: White Paper Reveals ₹13.18 Lakh Crore Debt Caused by Previous Government's Fiscal Mismanagement

சென்னை  ,ஜூன் 16 : தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய ‘வெள்ளை அறிக்கை’ (TN_White_Paper_English-2026.pdf) ,கடந்த காலங்களில் அரசு நிர்வாகத்தில் நிலவிய கடுமையான குளறுபடிகளையும் ,திட்டமிடல் இல்லாத போக்கையும் அம்பலப்படுத்தியுள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி காலத்தை மற்ற மாநிலங்கள் தங்களின் நிதி நிலையைச் சீரமைக்கப் பயன்படுத்திய வேளையில் ,தமிழகம் அந்த நல்வாய்ப்பைத்…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: அஸ்ஸாம் தாய் ,மகன் உயிரிழப்பு; உடல்களை மீட்க உறவினர்கள் தவிப்பு

Virudhunagar Firecracker Factory Blast: Assam Mother and Son Killed as Relatives Struggle to Recover Their Bodies

விருதுநகர்   ,ஜூன் 17: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கருந்திரி தயாரிப்பு கூடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ,அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல முடியாமல் ,நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின்…

விண்ணிலிருந்து இந்தியாவைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பாகிஸ்தான்: சீனாவின் உதவியுடன் 6 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

Pakistan Deploys Six Chinese-Assisted Surveillance Satellites to Intensify Monitoring of India from Space

சிறப்பு செய்தி  ,ஜூன் 16 : விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் பிராந்தியக் கண்காணிப்பில் இந்தியாவுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தும் வகையில் ,இந்திய எல்லைகளையும் ராணுவ நகர்வுகளையும் கண்காணிப்பதற்காகப் பாகிஸ்தான் விண்வெளியில் ஆறு புதிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளது என்ற பரபரப்புத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.சீனாவின் மிக நெருங்கிய தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் கடந்த 16 மாதங்களில்…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: குறையப்போகும் ஹோம் லோன் ,கார் லோன் ,பிசினஸ் லோன் வட்டி இந்தியாவுக்கு சூப்பர் குட் நியூஸ்!

US-Iran Ceasefire May Lead to Lower Home Loan, Car Loan and Business Loan Interest Rates in India

சிறப்பு தகவல்  ,ஜூன் 16 : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த போர்ப் பதற்றம் ,அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ள இந்த அமைதி உடன்படிக்கை ,இந்தியப் பொருளாதாரத்தில் மிக…

KSRTC சாதாரண பேருந்துகளில் அனைத்து மாநிலப் பெண்களுக்கும் இலவசப் பயணம் அமல்

கேரளா  ,ஜூன் 16 : கேரளாவில் அரசுப் பேருந்துகளில் அனைத்து மாநிலப் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாகப் பயணிக்கும் புதிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரள முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இத்திட்டத்தின் கீழ் ,கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) சாதாரண பேருந்துகளில் அனைத்து வயதுப் பெண்களும் திருநங்கைகளும் கட்டணமின்றிப் பயணம் செய்ய…

நெல்லை அருகே கோவில் முன்விரோத பழிவாங்கல்; முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணன் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 5 பேர் கைது நெல்லை:

Tirunelveli Murder Case: Former Panchayat President's Brother Hacked to Death Over Prior Enmity, Five Arrested Including Juvenile

நெல்லை , ஜூன் 16 : நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தில் நிலவி வந்த முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் சகோதரர் சப்பாணி மாடசாமி கோவில் முன்பாக ஒரு கும்பலால் கழுத்து நெரிக்கப்பட்டும் அறிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரை…