தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாகக் கள் விற்பனையில் ஈடுபடுவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறபட்டது . இதன் அடிப்படையில், ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டனின் தோட்டத்திற்குச் சென்று சோதனை மேலும் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது, மணிகண்டனுக்கும் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியது. இந்த மோதலின் உச்சகட்டமாக சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தனது துப்பாக்கியை எடுத்து விவசாயி மணிகண்டனின் இரண்டு கால்களிலும் சுட்டார்.
தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை நடவடிக்கை: விவசாயி ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளின்படி, தென்காசி வருவாய் கோட்டாட்சியரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆர்.டி.ஓ., கடந்த வாரம் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் வாக்குமூலம் பெற்றார். சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மணிகண்டன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மற்ற இரு காவலர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திலும் ஆர்.டி.ஓ. விரிவான விசாரணையை மேற்கொண்டார். காவல் நிலைய நாட்குறிப்புகள் மற்றும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மணிகண்டன் தோட்டத்தில் இருந்த நிலை குறித்தும், அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் உறவினர்களிடம் கேட்டறியப்பட உள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கபட்டன . அனைத்துத் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர், ஆர்.டி.ஓ. தனது இறுதி அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இச்சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் மருதம்புத்தூர் பகுதியில் இன்னமும் பரவலான பரபரப்பு நிலவி வருகிறது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments