தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாகக் கள் விற்பனையில் ஈடுபடுவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறபட்டது . இதன் அடிப்படையில், ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டனின் தோட்டத்திற்குச் சென்று சோதனை மேலும் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது, மணிகண்டனுக்கும் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியது. இந்த மோதலின் உச்சகட்டமாக சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தனது துப்பாக்கியை எடுத்து விவசாயி மணிகண்டனின் இரண்டு கால்களிலும் சுட்டார்.
தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை நடவடிக்கை: விவசாயி ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளின்படி, தென்காசி வருவாய் கோட்டாட்சியரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆர்.டி.ஓ., கடந்த வாரம் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் வாக்குமூலம் பெற்றார். சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மணிகண்டன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மற்ற இரு காவலர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திலும் ஆர்.டி.ஓ. விரிவான விசாரணையை மேற்கொண்டார். காவல் நிலைய நாட்குறிப்புகள் மற்றும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மணிகண்டன் தோட்டத்தில் இருந்த நிலை குறித்தும், அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் உறவினர்களிடம் கேட்டறியப்பட உள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கபட்டன . அனைத்துத் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர், ஆர்.டி.ஓ. தனது இறுதி அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இச்சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் மருதம்புத்தூர் பகுதியில் இன்னமும் பரவலான பரபரப்பு நிலவி வருகிறது.
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
சென்னை , ஜூன் 13 : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்தடை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கான காரணங்கள் குறித்தும் அதனை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரப்பூர்வ விளக்கங்களை… Read more: தமிழகத்தில் மின்தடைக்கு ஓவர்லோடு மற்றும் நிலத்தடி கேபிள்கள் சேதமே காரணம்: மின்வாரியம் விளக்கம்
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை செப்பறை அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும்… Read more: செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக… Read more: நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments