தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு: கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image 480

Chennai ,May 23 : விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளர் சேவையின் கீழ், கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) பணியில் உள்ள 3 காலிப் பணியிடங்களை விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்புவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தகுதியான வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையையும், வீரர்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒலிம்பிக், சர்வதேசப் போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு அரங்குகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த 3 சதவீத வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

Also Read : ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் வீரர்கள், குறிப்பிட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் , அதன் விவரங்கள்

  • விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு முந்தைய கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டுச் சாதனைகள் மட்டுமே தகுதிக்குரியதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • குழு விளையாட்டுகளைப் பொறுத்தமட்டில் (Group Games), மாநில அளவிலான போட்டிகளில் குறைந்தபட்சம் 50 சதவீதப் போட்டிகளில் விண்ணப்பதாரர் நேரடியாகப் பங்கேற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • மேலும், விண்ணப்பதாரர்களின் சாதனைகள் அனைத்தும் ‘சீனியர்’ (Senior Level) பிரிவில் பெறப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.ஜூனியர் அளவிலான சாதனைகள் இதில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அல்லது வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இது தவிர தெற்காசிய கூட்டமைப்பு போட்டிகள், பாரா ஒலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள் மற்றும் சர்வதேச பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்கான உலக விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்படும் போட்டிகளில் சாதித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தேசிய அளவைப் பொறுத்தவரை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மாநில அளவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டுச் சங்கங்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் .

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in வழியாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான அனைத்து அசல் விளையாட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஆவணங்களை இணையதளத்தில் உரிய வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளப் பதிவு வரும் மே 25-ஆம் தேதி (25.05.2026) காலை 10:00 மணி முதல் தொடங்குகிறது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 24-ஆம் தேதி (24.06.2026) மாலை 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »