புலி பட வருமான வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட மனு வாபஸ்

சென்னை , ஜூன் 2: திரைப்படத்திற்காகப் பெற்ற வருமானத்தை மறைத்ததாக தற்போதைய தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த பொதுநல வழக்கு இன்று அதிரடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Puli Movie Income Tax Case: Petition Filed Against Tamil Nadu CM Vijay Withdrawn Amid Legal Developments

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வருவாய் விவகாரங்கள் தொடர்பாக, அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, புலி படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த 15 கோடி ரூபாய் வருமானத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

வருமான வரித்துறையின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில், விஜய் தரப்பு மனுவை கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

Also read : CM விஜய் மகன் சஞ்சயின் திரைப்படம் சிக்மா ஜூலை 31ல் வெளியாகிறது

இந்தச் சூழலில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், வருமான வரித்துறை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவு ஆகியவற்றை நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், வருமானத்தை மறைத்த விவகாரத்தில் தற்போதைய முதல்வர் விஜய்க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழும், மோசடி மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதுமட்டுமன்றி, இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராயவும், இதில் உள்ள ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்குப் போதிய முகாந்தரம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சருக்கு எதிரான இந்த முக்கிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட உடனே, மனுதாரர் ராஜ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தத் தனிப்பட்ட பொதுநல வழக்கைத் தங்களுக்குத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

மனுதாரர் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை முழுமையாகத் திரும்பப் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனால், புலி பட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற சட்டப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1068

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »