சென்னை , ஜூன் 2: திரைப்படத்திற்காகப் பெற்ற வருமானத்தை மறைத்ததாக தற்போதைய தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த பொதுநல வழக்கு இன்று அதிரடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வருவாய் விவகாரங்கள் தொடர்பாக, அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, புலி படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த 15 கோடி ரூபாய் வருமானத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
வருமான வரித்துறையின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில், விஜய் தரப்பு மனுவை கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சூழலில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், வருமான வரித்துறை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவு ஆகியவற்றை நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், வருமானத்தை மறைத்த விவகாரத்தில் தற்போதைய முதல்வர் விஜய்க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழும், மோசடி மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதுமட்டுமன்றி, இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராயவும், இதில் உள்ள ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்குப் போதிய முகாந்தரம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சருக்கு எதிரான இந்த முக்கிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட உடனே, மனுதாரர் ராஜ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தத் தனிப்பட்ட பொதுநல வழக்கைத் தங்களுக்குத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
மனுதாரர் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை முழுமையாகத் திரும்பப் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனால், புலி பட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற சட்டப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Chennai, May 16:ஜனநாயகன் படம் இணையத்தில் கசியவிடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுவரை 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஜனநாயகன் படம் லீக் வழக்கில் புதிய திருப்பம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜனநாயகன் படம் இணையத்தில் கசியவிடப்பட்ட வழக்கில் தற்போது முக்கியமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது… Read more: ஜனநாயகன் படம் லீக்: மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் லீக் விவகாரம் புதிய திருப்பம். ‘எடிட்டர் இல்லை’ என்ற வாதத்தையும் மீறி, துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் திரையுலகையே அதிர்ச்சியடையச் செய்த நடிகர் Vijay நடித்த ‘ஜனநாயகன்’ படம் லீக் விவகாரம் தற்போது சட்ட ரீதியாக தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திருவேற்காடு சேர்ந்த உமாசங்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை Madras High Court தள்ளுபடி செய்துள்ளது. பொங்கல்… Read more: ஜனநாயகன் படம் லீக் வழக்கு: ‘எடிட்டர் இல்லை, துணிக்கடை மேனேஜர்’ – முன்ஜாமீன் மறுப்பு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக கசியப்பட்டது எப்போது, எப்படி, யார் மூலம் நடந்தது என்பது குறித்து மாநில சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை நடத்தியது. ஏப்ரல் 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் மேற்கொண்ட டிஜிட்டல் தடய ஆய்வில், மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திரைப்பட பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. எடிட் ரூமுக்குள் நுழைந்து திருட்டு நடந்ததா… Read more: ஜனநாயகன் படம் லீக் சர்ச்சை – எடிட் ரூமுக்குள் நுழைந்து காட்சி திருட்டா? உதவி எடிட்டர் கைது விவரம் அதிர்ச்சி
ஜனவரி 19, 2026; மும்பை : இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்கு 100 ஆண்டுகளை கடந்த வரலாறு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமா பெரும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. அதற்கு அடுத்ததாக டோலிவுட், கோலிவுட் சினிமாக்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக வசூல் சாதனைகளில் தன்னை நிலைநிறுத்தி வந்த பாலிவுட் சினிமா கடந்த சில ஆண்டுகளாக பெரும் சறுக்கல்களையே சந்தித்து வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தெலுங்கு மொழியில் இருந்து உருவான சில கமர்சியல் படங்கள்தான் இதற்கு காரணம் !… Read more: வெளியான 20 நாளில் ஆயிரம் கோடி வசூல் ! இந்திய திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்
நடிகர் விஜயை சுற்றிய குடும்ப சர்ச்சைகளுக்கு முடிவா? அவரது மகள் பகிர்ந்ததாக கூறப்படும் Instagram Story சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணி நடிகரும் அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் Vijay-ஐ சுற்றிய குடும்ப சர்ச்சைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் அவரது மகள் பகிர்ந்ததாக கூறப்படும் ஒரு Instagram Story சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்ப விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த… Read more: விஜய் மகள் பகிர்ந்ததாக கூறப்படும் Instagram Story வைரல் . குடும்ப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா?
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments