திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் ! திமுக அரசின் திட்டங்களை செயற்படுத்தாவிட்டால் தமிழக சட்டமன்றம் நடைபெறாது – திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டமான பேட்டி…

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று கட்சி அலுவலகத்தில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ராதாகிருஷ்ணன் கூறும்போது….
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் வாபஸ் பெற்றுள்ளார். இதனால் நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலில்
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகர் முகத்தில் கரியை பூச வேண்டும். அதற்காக முழுமூச்சாக செயல்படுவோம்.
தேர்தலில் ஒரு மாயாஜால அலை அடித்து எதிரணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் போட்டதற்கான காரணங்கள் குறித்து அலசி ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக குழு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெற்றி பெற்றவுடன் மகளிர்க்கு உரிமை தொகையாக 2500 தருவேன் என்று கூறி விட்டு இப்போது 1000 ரூபாய் கொடுத்தால் அது சரியா ?
பேருந்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என வாக்குறுதி கொடுத்தார் அது செய்யப்பட்டதா ? கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் விஜய் நிறைவேற்றவில்லை. எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கின்றனர் குறிப்பாக காமராஜர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, ஜெயலலிதா என பல தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் சிறப்பாக செய்திருந்தாலும் அவர்களை விட மிகச் சிறப்பாக ஒவ்வொரு நாளும் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து செயல்படுத்தியவர் தலைவர் ஸ்டாலின். பெண்களுக்கான பாதுகாப்பு முழுமையாக செயல்படுத்தியது திமுக அரசு. திமுக அரசில் அறிவித்த திட்டங்கள் இப்போதைய ஆட்சியிலும் தொடரும் அப்படி நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழக சட்டமன்றமே நடைபெறாது. தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் கவர்னர் ஆட்சி தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
ஆனால் அதிமுகவின் நிலை வேறு அவர்களை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் தற்பொழுது ஆளும்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த நிலை மாறும். தலைவர் ஸ்டாலின் கூறியது போல இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் புதிய தெம்புடன் தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து ஏழு முறையாக வெற்றி பெற்றதன் ரகசியம் குறித்து கேட்டபோது.. இதுவரை நான் எந்த மக்களிடமும் ஜாதி, மத பாரபட்சம் பார்த்து பழகுவதில்லை, தொகுதியில் அனைவரையும் என் மக்களாக நினைக்கிறேன் அதுதான் காரணம் என மிக காட்டமாக அரசியல் குறித்து பேசியவர், இறுதியில் கலகலப்பாக பேசி முடித்தார்.








