கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு போன மாதிரி யார் குடும்பமும் அழிஞ்சு போக கூடாது பெண்மணி ஆவேசம்…
விஜய் அண்ணா இத மட்டும் செஞ்சிட்டீங்கன்னா திரும்பவும் நீங்க தான் cm…
போராட்டத்தின் போது கூடவே இருந்து போராட்டம் செய்த போதை ஆசாமி திடீரென கடையை மூடக்கூடாது என குவாட்டர் பாட்டிலை உடைத்து போராட வந்த பெண்களிடம் வாக்குவாதம்… கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.மேலும் இந்த டாஸ்மாக் கடை அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை மூட உத்திரவிட்டத்தின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள கடைகளை மூடி வருகின்றனர்.
இந்நிலையில் சின்ன சேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையின் முன்பு போராட்டம் செய்தனர்.போராட்டத்தின் போது கூடவே இருந்து போராடிய போதை ஆசாமி திடீரென குவாட்டர் பாட்டிலை கீழே போட்டு உடைத்து கடையை மூடக்கூடாது என போராட வந்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்க ஆளாவதாகவும் மேலும் இந்த டாஸ்மாக் கடையால் தனது மகன் மற்றும் கணவரை இழுந்ததாகவும் அக்கிராமத்தைச் சேர்ந்த அசோதை என்ற பெண்மணி பேட்டி அளித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேட்டி அளித்த நபர் தான் வார்டு உறுப்பினர் எனவும் 5 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக் கடை அகற்றக்கோரி மனு அளித்ததாகவும் மேலும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை இந்த கடையை மூட முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த டாஸ்மாக் கடையை முழுவதும் மூடினால் நீங்கள் தான் அடுத்த முறையும் CM எனவும் கூறியுள்ளார்.
அகமதாபாத், ஜூன் 1: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 19-ஆவது ஐபிஎல் (IPL) தொடர், இரண்டு மாத கால விறுவிறுப்பானப் போட்டிகளுக்குப் பிறகு இன்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இதில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி;… Read more: சொதப்பிய குஜராத்… சிங்கம் போல சீறிய RCB!!! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாபெரும் வெற்றி
சென்னை, மே 31 : ஜூன் 1, 2026 முதல் பல தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய விதிகள் & கட்டண மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.வங்கிச் சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் & தமிழக அரசு நிர்வாகம் சார்ந்த முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு: வங்கி டெபாசிட் & சொத்து பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் : வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த விதிகளில் பொதுமக்களுக்குச் சாதகமான சில முக்கிய… Read more: ஜூன் 1 முதல் ATM கட்டணம், UPI பெயர்கள் & சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள்!!!
கோவை , மே 31: டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்றுடன் சுமுகமாக நிறைவடைந்தன. கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த முன்னணி அணிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தின. ஆண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும் என மொத்தம் 18 பலத்த அணிகள் இந்தத் தொடரில்… Read more: கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு; இந்திய இராணுவம், தென் மத்திய ரயில்வே சாம்பியன்
அகமதாபாத் , May 31: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்புடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம்… Read more: ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபியின் துல்லிய பந்துவீச்சு; 155 ரன்களில் சுருண்டது குஜராத்!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, தற்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read more: கோவையில் பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’… கட்டுமான வேகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!
தமிழகப் பெண்கள்: ஹீமோகுளோபின் குறைபாடும், சர்க்கரை நோய்க்கான தொடக்கப்புள்ளியும் | Dr. Sivaraman Medical Column சிறப்பு மருத்துவ கட்டுரை , மே 31: மனித உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனைத் தடையின்றி கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியைக் குருதியில் உள்ள ஹீமோகுளோபின் செய்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய காலகட்டத்தில் 40 சதவீத மக்கள், குறிப்பாகப் பெண்கள், போதிய ஹீமோகுளோபின் அளவின்றி ‘ஆக்சிஜன் பற்றாக்குறை’யால் தவித்து வருகின்றனர். வயிறு பசிக்குக் கெஞ்சுவதைப் போல, உடலின் உள்ளுறுப்புகள் ஆக்சிஜன்… Read more: இந்த ஆரோக்கிய தவறுகள் பெண்களின் வாழ்வையே பாதிக்கும்.. டாக்டர் சிவராமன் விளக்கம்!
டெல்லி , May 31: டெல்லி சாக்கெட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் சனிக்கிழமை இரவு ஐந்து அடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய நீடித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். சனிக்கிழமை இரவு 7:44 மணியளவில் இந்த விபத்து… Read more: டெல்லி கட்டிட விபத்து: 5 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி; இடிபாடுகளுக்குள் தொடரும் மீட்புப் பணி
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments