அவிநாசியில் இடி, மின்னலுடன் கனமழை: 60 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கத்தரி வெயில் காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவான இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.…













