ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

image 479

தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாகக் கள் விற்பனையில் ஈடுபடுவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறபட்டது . இதன் அடிப்படையில், ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டனின் தோட்டத்திற்குச் சென்று சோதனை மேலும் விசாரணையில் ஈடுபட்டனர்.

also read : மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை

விசாரணையின்போது, மணிகண்டனுக்கும் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியது. இந்த மோதலின் உச்சகட்டமாக சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தனது துப்பாக்கியை எடுத்து விவசாயி மணிகண்டனின் இரண்டு கால்களிலும் சுட்டார்.

தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை நடவடிக்கை: விவசாயி ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளின்படி, தென்காசி வருவாய் கோட்டாட்சியரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆர்.டி.ஓ., கடந்த வாரம் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் வாக்குமூலம் பெற்றார். சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மணிகண்டன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மற்ற இரு காவலர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திலும் ஆர்.டி.ஓ. விரிவான விசாரணையை மேற்கொண்டார். காவல் நிலைய நாட்குறிப்புகள் மற்றும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

தற்போது இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மணிகண்டன் தோட்டத்தில் இருந்த நிலை குறித்தும், அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் உறவினர்களிடம் கேட்டறியப்பட உள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கபட்டன . அனைத்துத் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர், ஆர்.டி.ஓ. தனது இறுதி அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இச்சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் மருதம்புத்தூர் பகுதியில் இன்னமும் பரவலான பரபரப்பு நிலவி வருகிறது.

– செய்தியாளர், தென்காசி

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »