Chennai , May 10 : தமிழகத்தின் 10 லட்சம் கோடி கடன், White Paper, கனிமவள கொள்ளை குறித்து விஜய் அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த முக்கிய ரியாக்ஷன் .
தமிழக அரசியல் களத்தில் “White Paper” என்ற வார்த்தை மீண்டும் தீவிரமாக பேசப்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நிதிநிலை, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை, கனிமவள கொள்ளை, நிர்வாக சீர்திருத்தம் போன்ற விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள “வெள்ளை அறிக்கை” அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த பதில் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் வெளிப்படையாக “தவறுகளை அனுமதிக்க மாட்டேன்” என்று அறிவித்திருப்பது தமிழக மக்களிடம் புதிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக சகாயம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஊழலை அகற்றி நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடந்தால் தமிழ்நாடு மீண்டும் வலுவான பாதைக்கு திரும்பும் என்றும் அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜயின் White Paper அறிவிப்புக்கு சகாயம் வரவேற்பு
சமீபத்தில் ஊடகங்களுக்கு பேசிய சகாயம், “மிக சவாலான ஒரு பணி தமிழக அரசுக்கு காத்திருக்கிறது. செலவுகளை குறைத்து, ஊழலை அகற்றி உறுதியான இலட்சியத்தோடு பயணித்தால் மாற்றம் சாத்தியம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இன்றைக்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் பகிரங்கமாக ‘தவறுகளை அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதுவே ஒரு நல்ல அறிகுறி. இந்த அறிவிப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
அரசுக்கு தங்களை போன்ற அதிகாரிகளின் ஆலோசனை தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சகாயம், “நான் மிகச் சிறியவன். ஆனால் 30 ஆண்டுகளாக நேர்மையான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறேன். என்னை உருவாக்கிய தமிழ் சமூகத்திற்காக தொடர்ந்து என்னுடைய பங்களிப்பை செய்வேன்” என்று கூறினார்.
கனிமவள கொள்ளை குறித்து மீண்டும் பேசப்பட்ட பழைய சர்ச்சை
தமிழகத்தில் கனிமவள கொள்ளை விவகாரம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஒரு பெரிய பிரச்சினை. குறிப்பாக, கிரானைட் ஊழல் விவகாரத்தை இந்திய அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகளில் முக்கியமானவர் சகாயம்.
அந்த விவகாரம் குறித்து பேசிய அவர், “2010-க்கு முன்பாக இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப்பெரிய Granite Scam-ஐ நான் வெளிக்கொண்டு வந்தேன். ஆனால் இன்றுவரை அதில் பெரிய முன்னேற்றம் இல்லை. நமது அமைப்பு எவ்வளவு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே, “மாண்புமிகு விஜய் அவர்களின் ஆட்சியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
10 லட்சம் கோடி கடன்.. தமிழகத்தின் மிகப்பெரிய சவால்?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த கேள்விக்கும் சகாயம் நேரடியாக பதிலளித்தார். “தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பது உண்மை. ஒவ்வொரு ஆண்டும் அந்த கடனுக்கான வட்டிக்கே பெரும் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “செலவுகளை கட்டுப்படுத்தி, ஊழலை அகற்றி, உறுதியான நிர்வாகத்தோடு சென்றால் ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமையை மாற்ற முடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
விஜய் அறிவித்துள்ள White Paper குறித்த கேள்விக்கு, “அது அருமையான முடிவு. அந்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று கூறியதை நாம் வரவேற்க வேண்டும்” என்று சகாயம் தெரிவித்தார்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments