ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்….
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து ஓடினாலும் அதன் கிளை நதிகள் தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் செல்கிறது. இந்த நதிகளின் மூலம் பயன்படும் தாமிரபரணி வடிகால் குளங்களில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏ ட்ரீ என்ற தன்னார்வ அமைப்புடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது பறவைகளின் இனம், வசிப்பிடம், கூடுகள், எச்சம், உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுக்கப்படும். மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பதிவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 வகையான சுமார் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள சூழலில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள நயினார் குளத்திலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. தொலை நோக்கு கருவிகள் மூலம் நேரில் கண்டு பறவைகளை கணக்கீடு செய்தனர். நயினார்குளத்தில் 10 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் உள்ளது. இதில் நீலத்தலை கோழி, பாம்புதாரா, நீலசிறகு வாத்து, சென்டுவாத்து, மூக்கு தாரா, ஜம்புநாரை என பல்வேறு வகையான பறவைகள் காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது. சில வெளிநாட்டு பறவைகளும் குளங்களில் தென்படுகின்றன. கடந்த முறை கணக்கெடுப்பில் 70 வகையான 24 ஆயிரம் பறவைகள் தெரியவந்தது. இந்த ஆண்டு இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு