ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்….
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து ஓடினாலும் அதன் கிளை நதிகள் தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் செல்கிறது. இந்த நதிகளின் மூலம் பயன்படும் தாமிரபரணி வடிகால் குளங்களில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏ ட்ரீ என்ற தன்னார்வ அமைப்புடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது பறவைகளின் இனம், வசிப்பிடம், கூடுகள், எச்சம், உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுக்கப்படும். மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பதிவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 வகையான சுமார் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள சூழலில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள நயினார் குளத்திலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. தொலை நோக்கு கருவிகள் மூலம் நேரில் கண்டு பறவைகளை கணக்கீடு செய்தனர். நயினார்குளத்தில் 10 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் உள்ளது. இதில் நீலத்தலை கோழி, பாம்புதாரா, நீலசிறகு வாத்து, சென்டுவாத்து, மூக்கு தாரா, ஜம்புநாரை என பல்வேறு வகையான பறவைகள் காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது. சில வெளிநாட்டு பறவைகளும் குளங்களில் தென்படுகின்றன. கடந்த முறை கணக்கெடுப்பில் 70 வகையான 24 ஆயிரம் பறவைகள் தெரியவந்தது. இந்த ஆண்டு இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத், ஜூன் 1: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 19-ஆவது ஐபிஎல் (IPL) தொடர், இரண்டு மாத கால விறுவிறுப்பானப் போட்டிகளுக்குப் பிறகு இன்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இதில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி;… Read more: சொதப்பிய குஜராத்… சிங்கம் போல சீறிய RCB!!! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாபெரும் வெற்றி
சென்னை, மே 31 : ஜூன் 1, 2026 முதல் பல தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய விதிகள் & கட்டண மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.வங்கிச் சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் & தமிழக அரசு நிர்வாகம் சார்ந்த முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு: வங்கி டெபாசிட் & சொத்து பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் : வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த விதிகளில் பொதுமக்களுக்குச் சாதகமான சில முக்கிய… Read more: ஜூன் 1 முதல் ATM கட்டணம், UPI பெயர்கள் & சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள்!!!
கோவை , மே 31: டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்றுடன் சுமுகமாக நிறைவடைந்தன. கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த முன்னணி அணிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தின. ஆண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும் என மொத்தம் 18 பலத்த அணிகள் இந்தத் தொடரில்… Read more: கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு; இந்திய இராணுவம், தென் மத்திய ரயில்வே சாம்பியன்
அகமதாபாத் , May 31: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்புடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம்… Read more: ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபியின் துல்லிய பந்துவீச்சு; 155 ரன்களில் சுருண்டது குஜராத்!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, தற்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read more: கோவையில் பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’… கட்டுமான வேகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!