
Rajasthan , May 11 ; NEET UG 2026 paper leak வழக்கில் முக்கிய குற்றவாளி Babulal Katara கைது. ரூ.5 லட்சத்திற்கு question bank விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்.
இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வாக பார்க்கப்படும் NEET UG 2026 தேர்வு மீண்டும் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது. ராஜஸ்தானில் வெடித்துள்ள NEET question paper leak வழக்கில் முக்கிய மூளையாக கருதப்படும் Babulal Katara கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் Special Operations Group நடத்திய விசாரணையில், தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள்கள் மற்றும் question bank பல மாணவர்களிடம் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் National Testing Agency (NTA) மீது மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.
NEET UG Paper Leak வழக்கில் Babulal Katara கைது : விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த paper leak network-இன் முக்கிய ஒருங்கிணைப்பாளராக Babulal Katara செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் தொடர்புடைய Anil Mina என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kerala MBBS மாணவர் மூலம் கேள்வித்தாள் பரவியதா? அனில் மீனா, Babulal Katara-வின் உறவினராக இருப்பதாகவும், leaked question paper-ஐ பலரிடம் பகிர்ந்த முக்கிய நபராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் பல மாணவர்கள் இந்த leaked material மூலம் தேர்வில் முன்னிலை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விசாரணையில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்களில் ஒன்று, Kerala-வில் MBBS படித்து வரும் மாணவர் ஒருவர் இந்த question paper circulation chain-இல் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்பதாகும். அந்த மாணவர் Rajasthan மாநிலத்தின் Sikar மாவட்டத்தில் உள்ள நண்பருக்கு கேள்வித்தாள்களை அனுப்பியதாகவும், அதன் பின்னர் அந்த material பலரிடம் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனுடன் சில career counsellors மற்றும் private coaching தொடர்புடைய நபர்களும் இந்த leak network-இல் இருந்திருக்கலாம் என Rajasthan போலீஸ் சந்தேகிக்கிறது.
Social Media மற்றும் Encrypted Apps மூலம் பரவிய Question : விசாரணை அமைப்புகள் கூறுவதன்படி, question bank சமூக வலைத்தளங்கள் மற்றும் encrypted messaging apps மூலம் பரவியிருக்கிறது. தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே இந்த material ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேர்வுக்கு முந்தைய இரவில் இதே material ரூ.30,000-க்கு விற்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு “guess paper” என்ற பெயரில் இந்த documents அனுப்பப்பட்டதாகவும், ஆனால் உண்மையான NEET examination paper-இல் 140 கேள்விகள் வரை match ஆகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே தற்போது விசாரணையை மிகவும் தீவிரமாக்கியுள்ளது.
NTA மீண்டும் சர்ச்சையின் மையத்தில்
முன்பும் NEET மற்றும் competitive examinations தொடர்பாக paper leak குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற விவகாரம் வெடித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தனிப்பட்ட leak சம்பவமா அல்லது நாடு முழுவதும் செயல்படும் பெரிய syndicate-ஆ என்பதைக் கண்டறிய Rajasthan SOG தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முக்கியமாக, leaked material circulation ஒரு திட்டமிட்ட operation போல இருந்ததா என்பது தற்போது விசாரணையின் முக்கிய கோணமாக மாறியுள்ளது.








