கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த இரு பெரும் விழாக்களையும் முன்னிட்டு, அப்பகுதியில் 9 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

image 554

தென் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகழ்பெற்ற 13 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதேபோல், காளைகளை அடக்குவதற்காகப் பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர்களில் இருந்து, ஒரு குழுவிற்கு தலா 9 பேர் வீதம் மொத்தம் 99 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ஆர்வத்துடன் களம் இறங்கினர்.

Also Read : 108 திவ்ய தேசம் : முதல் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்- ரங்கநாதரின் அதிசயங்கள் என்ன?

போட்டிக்கான விதிமுறைகளின்படி, களத்தில் இறக்கப்படும் ஒவ்வொரு காளைக்கும் தலா 15 நிமிடங்கள் கால அவகாசம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையின் வடம் பிடித்து, அதன் திமிலை அடக்க வீரர்கள் பாய்ந்து சென்றதும், அவர்களிடம் சிக்காமல் காளைகள் மைதானத்தைச் சுற்றி சுழன்றடித்து மிரட்டியதும் களத்தை விறுவிறுப்பாக்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 15 நிமிட நேரத்திற்குள் காளைகளைத் திறம்பட அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடி அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம், சில்வர் அண்டாக்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் நினைவுப் பரிசுகள் விழாக்கமிட்டியினரால் மேடையில் வழங்கப்பட்டன.

பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண்பதற்காகப் புதுக்கோட்டை, கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் வருகை தந்திருந்தனர். மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த திரளான பார்வையாளர்கள், வீரர்களின் ஒவ்வொரு பிடிக்கும், காளைகளின் சீற்றத்திற்கும் கைதட்டி, ஆரவாரம் செய்து போட்டியை முழுமையாகக் கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கிராமப் பொதுமக்கள் மற்றும் விழாப் பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »