செங்கல்பட்டு , ஜூன் 24: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூரச் செயல் தொடர்பாக மகேஷ்வரன் (20), அஜய் (27) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இயற்கை உபாதைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இருவர் அச்சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதன்போது பயந்துபோன சிறுமி கூச்சலிட முயன்றதாகவும் அக்கம் பக்கத்தினர் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவரது வாயில் துணியைத் திணித்து இக்கொடூரத்தைச் செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலைகுலைந்த சிறுமியை சம்பவ இடத்திலேயே கைவிட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு: 104 சாட்சிகள்… 15 நாட்களில் தீர்ப்பு? தீவிர விசாரணை
தனியார் பள்ளி கட்டணம் குறித்து வெளியான உயர் நீதிமன்றம் அதிரடி அப்டேட்
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய மகேஷ்வரன் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அண்மையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய காவலர்களே இன்னும் அதே பகுதிகளில் பணியில் நீடிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் முறையாக ரோந்துப் பணிகளில் ஈடுபடாமல் சுயநல நோக்கோடு செயல்படுவதாலேயே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் இப்பகுதியில் அதிகரித்து வருவதாக அக்குடியிருப்பாளர்கள் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





