தருமபுரி, ஜூன் 2: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவிரி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாபாளையம், கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும், கர்நாடக மாநில எல்லைப் பகுதியான கனகபுராவிலும் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்தத் தொடர் மழையின் காரணமாகக் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை குறைவான அளவில் வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, நேற்று காலை நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நள்ளிரவிலும் மழை நீடித்ததால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமென ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாகத்தான் காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழைகிறது. இதனால், அங்குள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து துல்லியமாகக் கணக்கிட்டும், தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனர். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிக்கும் பட்சத்தில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆற்றோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். பாதிக்கப்பட்டவர்களின் வலியையும்… Read more: நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி
டெல்லி,ஜூன் 2: தமிழக பாஜகவின் முக்கிய முகமாகவும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்த கே.அண்ணாமலை பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தேசியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்களைச் சந்திப்பதற்காக… Read more: பாஜகவில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல் ஏன் : வெளியான புதிய தகவல்
திருப்பூர் , ஜூன் 2: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி உழவர்களின் முழு பயிர்க்கடனையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் இன்று உழவர் அமைப்புகளும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த… Read more: பயிர்க்கடன் தள்ளுபடி: திருப்பூரில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை , ஜூன் 2: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.பணிநீட்டிப்பில் தொடர்ந்து வந்த அவர் தனது விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கியுள்ளார்.தமிழக அரசியல் சூழலில் பல்வேறு முக்கிய நகர்வுகள் அரங்கேறி வரும் வேளையில் சட்டப்பேரவை செயலாளரின் இந்த திடீர் முடிவு தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டப்பேரவை செயலாளராக நீண்ட அனுபவம் கொண்ட சீனிவாசன் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் அரசுப் பணியில்… Read more: தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா
சென்னை, ஜூன் 2 : சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. காற்றில் பரவிய கடுமையான நெடி காரணமாக, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் தொடர் இருமல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. தலைமைச் செயலகத்தின் எதிரே அமைந்துள்ள சென்னை துறைமுக வளாகத்தில் இருந்து இந்த வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை… Read more: தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயுக்கசிவு: சென்னை துறைமுகப் பகுதியில் மக்கள் மூச்சுத் திணறல்
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments