ராமநாதபுரம் , May 13 : கமுதி அருகே பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில்- பிரம்மாண்டமாய் நடைபெற்ற 50 ம் ஆண்டு குருபூஜை விழா ! பக்தர்கள் அழகுவேல் எடுத்தும், சிறுவர்கள் வேடம் அணிந்தும், பெண்கள் 1008 பால்குடம் ஊர்வலம் நடத்தி பெரிய நாச்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் குருநாத சுவாமி பெரிய நாச்சியம்மன் சித்தி விநாயகர் படர்ந்த புலி கற்பக விநாயகர் கரிசில் குளம் செல்வ விநாயகர் சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய நாச்சி அம்மன் சுவாமிக்கு குருநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அழுகுவேல் எடுத்தும், சிறுவர்கள் செத்தாண்டி வேடம் அணிந்தும், 1008 பெண்கள் பால்குடங்களை சுமந்து மேளதாளம் இசை வாத்தியங்கள், வாண வேடிக்கைகள் முழங்க பம்மனேந்தல் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கிராம பரிவார தேவதைகள் சுவாமிகளை வலம் சுற்றி சென்று நிறைவாக பெரியநாச்சி அம்மன் ஆலயம் சென்று மூலவர் பெரியநாச்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இதில் பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
புதுடெல்லி , ஜூன் 10 : தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை மிகக் குறுகிய நேரமே சந்தித்ததாகவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டுமே சந்தித்ததாகவும் எழுந்த விமர்சனங்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்த முறை அவரது பயணத் திட்டம்… Read more: பிரதமர் விருந்தில் முதல்வர் விஜய்: டெல்லியில் கூட்டணித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு
கோவை , June 10 : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தொடங்கப்பட்ட 21-வது நாளிலேயே காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் இந்த முதற்கட்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சூலூர் அருகே கடந்த மாதம் 21-ஆம் தேதி 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான… Read more: கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு – மெகா திருப்பம்.
புது தில்லி , June 10 : கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் தற்போதைய 2026 வரையிலான இந்த 12 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத பல மைல்கற்களை எட்டியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் ‘Make in India’ போன்ற பொருளாதாரக் கொள்கைகளும், உள்நாட்டு உற்பத்திக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் பங்குச்சந்தையின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. இக்காலக்கட்டத்தில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு… Read more: மோடி ஆட்சியின் மல்டிபேக்கர் பங்குகள் : ₹1 லட்சம் முதலீடு ₹2 கோடியாக மாறியதா? 206X லாபம்!
புதுடெல்லி , June 10 : உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் விலைக் கொள்கை பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ET ஊடகவியலாளர் நவிகா குமார் உடனான சிறப்பு நேர்காணலில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் விலை… Read more: எரிபொருள் விலை உயர்வு: பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி
நெல்லை , ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்… Read more: சிங்கப்பெண் அதிரடிப்படை அமல்: நெல்லை-தென்காசி காவல்துறைக்கு ஐ.ஜி.விஜயேந்திர பிதாரி முக்கிய ஆலோசனைக் கூட்டம்
சென்னை June 10: தமிழ் திரைப்படத் துறையில் கிராமியக் கதைகளின் வழியாகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முத்திரை இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது என்று பிரபல நடிகர் ஆனந்தராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவுடனான தனது நினைவுகளையும் அவரது மறைவு ஏற்படுத்திய பாதிப்புகளையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்ற அந்த காந்தக் குரலை இனி நேரில் கேட்க முடியாது என்ற உண்மை ஒட்டுமொத்தத் திரையுலகையும்,… Read more: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு: கடைசி வரை நிறைவேறாமலே போன ஆசை – நடிகர் ஆனந்தராஜ்
சென்னை, ஜூன் 9: தமிழக காவல்துறையின் வரலாற்றிலும், திருநங்கைகளின் சமூகப் போராட்டப் பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக மாநில அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவில் முதல் திருநங்கையாகக் காவலர் தீபிகா காமராஜ் இணைந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் தற்போது சென்னை சேத்துப்பட்டு (G7) சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ்… Read more: தமிழ்நாடு சிங்கப்பெண் அதிரடிப்படை: முதல் திருநங்கையாகக் களமிறங்கும் காவலர் தீபிகா காமராஜ் நெகிழ்ச்சிப் பேட்டி
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments