ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்….
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து ஓடினாலும் அதன் கிளை நதிகள் தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் செல்கிறது. இந்த நதிகளின் மூலம் பயன்படும் தாமிரபரணி வடிகால் குளங்களில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏ ட்ரீ என்ற தன்னார்வ அமைப்புடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது பறவைகளின் இனம், வசிப்பிடம், கூடுகள், எச்சம், உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுக்கப்படும். மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பதிவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 வகையான சுமார் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள சூழலில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள நயினார் குளத்திலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. தொலை நோக்கு கருவிகள் மூலம் நேரில் கண்டு பறவைகளை கணக்கீடு செய்தனர். நயினார்குளத்தில் 10 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் உள்ளது. இதில் நீலத்தலை கோழி, பாம்புதாரா, நீலசிறகு வாத்து, சென்டுவாத்து, மூக்கு தாரா, ஜம்புநாரை என பல்வேறு வகையான பறவைகள் காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது. சில வெளிநாட்டு பறவைகளும் குளங்களில் தென்படுகின்றன. கடந்த முறை கணக்கெடுப்பில் 70 வகையான 24 ஆயிரம் பறவைகள் தெரியவந்தது. இந்த ஆண்டு இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது… Read more: வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை