ஓசூர் இருசக்கர வாகன டிக்கியில் நல்லபாம்பு: அதிர்ச்சியில் வாகன ஓட்டி

ஓசூர் , ஜூன் 26 :கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி ரோடு பகுதியில் இன்று காலையில் இருசக்கர வாகனத்தின் டிக்கிக்குள் நல்லபாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Discovery in Hosur: Cobra Found Inside a Two-Wheeler Storage Compartment, Rider Left Terrified

ஓசூர் நேதாஜி ரோடு பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் சலாவுதீன் என்பவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளார். கடையின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக அதன் டிக்கியை அவர் திறந்துள்ளார். அப்போது டிக்கிக்குள்ளே நல்லபாம்பு ஒன்று சுருண்டு பதுங்கியிருந்ததைக் கண்டு அவர் நிலைகுலைந்து அதிர்ச்சி அடைந்தார்.

நொளம்பூர் கொலை: 24 மணி நேரத்தில் ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு; 8 பேர் கைது

இதனைத் தொடர்ந்து சலாவுதீன் உடனடியாக அப்பகுதி மக்களுக்கும் வனத்துறை மற்றும் பாம்பு மீட்புப் பணியாளர்களுக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு மீட்புப் பணியாளர்கள் உடனடியாகப் பாம்பை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் பாம்பு வாகனத்தின் உட்புற இடுக்கில் சிக்கியிருந்ததால் ஒரு மெக்கானிக்கின் உதவியை நாடினர்.

தொடர்ந்து மெக்கானிக் உதவியுடன் இருசக்கர வாகனத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பிரிக்கப்பட்டன. இறுதியாக டிக்கிக்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பை மீட்புப் பணியாளர்கள் எவ்வித காயமுமின்றி லாபகரமாகப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அந்த நல்லபாம்பு பின்னர் அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் ஓசூர் நேதாஜி ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பும், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பும் நிலவியது. சமீப காலமாக குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மீட்புக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக வாகனங்களை நீண்ட நேரம் மற்றும் நீண்ட நாட்கள் வீட்டின் வெளியிலோ அல்லது திறந்த வெளியிலோ நிறுத்தி வைத்திருப்பவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பாக டிக்கி மற்றும் என்ஜின் பகுதி உள்ளிட்ட மறைவான இடங்களை ஒருமுறைக்கு இருமுறை கவனமாகச் சோதனை செய்த பின்னரே இயக்க வேண்டும் எனப் பாம்பு பிடி வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *