
சினிமா செய்தி : ரஜினி-கமல் புதிய படம், திரிஷா இணைவு, சாரா அலிகான் தென்னிந்திய அறிமுகம், சூர்யா ரசிகர் சம்பவம், விஷால் கருத்து உள்ளிட்ட சினிமா அப்டேட்கள்.
தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்த பரபரப்பான அப்டேட்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகை திரிஷா, பாலிவுட் நடிகை சாரா அலிகான், நடிகர் சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை சுற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பேசப்பட்டு வருகின்றன.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் திரிஷா?
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய மல்டி ஸ்டார் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
திரிஷா ஏற்கனவே கமல்ஹாசனுடன் “மன்மதன் அம்பு”, “தூங்காவனம்”, “தக் லைஃப்” போன்ற படங்களிலும், ரஜினிகாந்துடன் “பேட்ட” திரைப்படத்திலும் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கிறாரா சாரா அலிகான்?
பாலிவுட் நடிகை சாரா அலிகான் தற்போது தென்னிந்திய ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளார். சமீபத்தில் தனது தென்னிந்திய சினிமா அறிமுகம் குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதில், “பாலிவுட் சினிமாதான் எனக்கு எல்லாமே. ஆனால் என் புகழும் அங்கீகாரமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்ததே என் பெருமை. அதே நேரத்தில் ஒரு நடிகையாக பிறமொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அங்குள்ள நடிப்பு யுக்திகளும், கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் என்னை கவர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்குப் பிறகு, சாரா அலிகான் விரைவில் தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சமீப காலமாக பல பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சாரா அலிகானின் இந்த கருத்தும் திரையுலகில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
சூர்யாவை பதற வைத்த ரசிகர் சம்பவம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழா “வீரபத்ரடு” பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யாவை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென மேடையிலேயே அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகரின் இந்த செயலால் ஒரு கணம் சூர்யா பதறியபோதிலும், உடனடியாக அவரை எழுப்பி அமைதியாக பேசினார். பின்னர் ரசிகரை அணைத்துக்கொண்ட சூர்யாவின் செயல் அங்கிருந்தவர்களின் பாராட்டை பெற்றது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
717 டாஸ்மாக் கடைகள் மூடல்.. விஷால் வெளியிட்ட வீடியோ
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில், “ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது மிகப்பெரிய சாதனை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதைப் பற்றி நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். இப்போது நடைமுறைக்கு வரும் போது சல்யூட் அடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விஷால் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படப்பிடிப்பு மீண்டும் தாமதமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “சேயோன்” திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. “தாய்க்கிழவி” பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் மார்ச் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் காரணமாக வெளிப்புற படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், அன்றும் முழுமையான படப்பிடிப்பு நடைபெறவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் “சேயோன்” படம் நிறுத்தப்பட்டுவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மே 15ஆம் தேதி முதல் ஒத்திகை பணிகள் தொடங்க உள்ளதாகவும், மே 18ஆம் தேதி முதல் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு…
கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று…
தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி,…
சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் நகைகளைப் போன்றே துல்லியமாகத்…
நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று (மே 27, 2026) திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின்…
கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை…








