ரஜினி-கமல் கூட்டணியில் திரிஷா? தென்னிந்திய சினிமாவுக்கு வருகிறாரா சாரா அலிகான்? சூர்யா மேடையில் ரசிகர் செய்த செயல் வைரல்

image 263

சினிமா செய்தி : ரஜினி-கமல் புதிய படம், திரிஷா இணைவு, சாரா அலிகான் தென்னிந்திய அறிமுகம், சூர்யா ரசிகர் சம்பவம், விஷால் கருத்து உள்ளிட்ட சினிமா அப்டேட்கள்.

தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்த பரபரப்பான அப்டேட்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகை திரிஷா, பாலிவுட் நடிகை சாரா அலிகான், நடிகர் சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை சுற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பேசப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் திரிஷா?

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய மல்டி ஸ்டார் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

திரிஷா ஏற்கனவே கமல்ஹாசனுடன் “மன்மதன் அம்பு”, “தூங்காவனம்”, “தக் லைஃப்” போன்ற படங்களிலும், ரஜினிகாந்துடன் “பேட்ட” திரைப்படத்திலும் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கிறாரா சாரா அலிகான்?

பாலிவுட் நடிகை சாரா அலிகான் தற்போது தென்னிந்திய ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளார். சமீபத்தில் தனது தென்னிந்திய சினிமா அறிமுகம் குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில், “பாலிவுட் சினிமாதான் எனக்கு எல்லாமே. ஆனால் என் புகழும் அங்கீகாரமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்ததே என் பெருமை. அதே நேரத்தில் ஒரு நடிகையாக பிறமொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அங்குள்ள நடிப்பு யுக்திகளும், கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் என்னை கவர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்குப் பிறகு, சாரா அலிகான் விரைவில் தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சமீப காலமாக பல பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சாரா அலிகானின் இந்த கருத்தும் திரையுலகில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

சூர்யாவை பதற வைத்த ரசிகர் சம்பவம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழா “வீரபத்ரடு” பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யாவை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென மேடையிலேயே அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகரின் இந்த செயலால் ஒரு கணம் சூர்யா பதறியபோதிலும், உடனடியாக அவரை எழுப்பி அமைதியாக பேசினார். பின்னர் ரசிகரை அணைத்துக்கொண்ட சூர்யாவின் செயல் அங்கிருந்தவர்களின் பாராட்டை பெற்றது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்.. விஷால் வெளியிட்ட வீடியோ

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில், “ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது மிகப்பெரிய சாதனை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதைப் பற்றி நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். இப்போது நடைமுறைக்கு வரும் போது சல்யூட் அடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விஷால் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படப்பிடிப்பு மீண்டும் தாமதமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “சேயோன்” திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. “தாய்க்கிழவி” பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார்.

சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் மார்ச் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் காரணமாக வெளிப்புற படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், அன்றும் முழுமையான படப்பிடிப்பு நடைபெறவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் “சேயோன்” படம் நிறுத்தப்பட்டுவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மே 15ஆம் தேதி முதல் ஒத்திகை பணிகள் தொடங்க உள்ளதாகவும், மே 18ஆம் தேதி முதல் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
TVK MLA Horse Trading Row: ₹50 Crore Bribery Allegations, Singapore Link Emerges as Police Intensify Investigation

சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின்…

Continue Reading
நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு

நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக்…

Continue Reading
நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை ,  ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர்.…

Continue Reading
நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!

நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம்…

Continue Reading
வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை

நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது…

Continue Reading
நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை

நெல்லை  , ஜூலை 4 : நெல்லை சந்திப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (29). இவர் நெல்லை…

Continue Reading
Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *