டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்

கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் தமிழக முதல்வருக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட (MRP) கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சமீபத்தில் எச்சரித்திருந்தார். அரசின் இந்த உத்தரவை மீறி, ஆங்காங்கே சில கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Also read : அம்பத்தூரில் காரோடு ரூ.20 லட்சம், 20 சவரன் நகை கொள்ளை: கார் மீட்பு, மர்ம நபர்களுக்கு வலை

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது, அந்த மதுபாட்டிலில் நிர்ணயிக்கப்பட்ட விலையான 250 ரூபாயை விட, கூடுதலாக 20 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து மொத்தம் 270 ரூபாயை அந்த நபர் யூபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகச் செலுத்தியுள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து அந்த மதுப்பிரியர் அங்கிருந்த டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர்கள், வாங்கிய மதுபாட்டிலை திருப்பி ஒப்படைத்தால், கூடுதலாக வாங்கிய தொகையில் 10 ரூபாயை மட்டும் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். கடை ஊழியர்களின் இந்தத் பொறுப்பற்ற பதில் அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக எச்சரித்த பிறகும், கள அளவில் இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட அந்த மதுப்பிரியர் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரமும் இப்புகாரோடு இணைக்கப்பட்டுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »