கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமி இருவரும் பழகியதாக கூறப்படுகிறது தெரிகிறது . இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய் பழகியதாக கூறப்படும் பெண்ணின் தந்தை குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் சஞ்சய் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே அவர்கள் சஞ்சையை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் சில இடங்களில் சஞ்சய்க்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் ரத்த காயங்களுடனும், கீழே விழுந்துள்ளார் உடன் வந்த அவரது நண்பர்கள் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் விடாமல் துரத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கத்தி பட்டு மாரிமுத்துவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து கத்திக்குத்தில் காயம் அடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்து இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக சஞ்சய் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
காதல் விவகாரத்தில் காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது
கோவை , ஜூன் 11 : தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நீடிப்பதற்கான சூழல் இன்று இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கட்சியின் நிர்வாகக் குழு கூடி இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து… Read more: திமுக கூட்டணியில் நீடிக்க இன்றுள்ள சூழலில் இடமில்லை: CPIமாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், அதற்குள் அவசர அவசரமாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல என்றும், பொறுப்பேற்ற உடனே மந்திரம் செய்து அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்வதற்கு அவர் கையில் எந்த மாயாஜாலக்கோலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி… Read more: விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல: பொறுப்பேற்ற உடனே விமர்சிப்பது நியாயமில்லை என திருநாவுக்கரசர் கருத்து
பெரியகுளம் , June 6: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் புதிய… Read more: அண்ணாமலை அமித்ஷாவின் ஒரு மாய மான்: பெரியகுளத்தில் கி.வீரமணி விமர்சனம்
சென்னை ,ஜூன் 5: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா,திமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக,திமுகவின் தோல்வி குறித்தும்,அக்கட்சியின் தலைவர்களது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். ஆர்.கே. நகரில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா,”தம்பி இளவரசர் உதயநிதி அவர்களே,உங்களுக்கு உங்கள் தந்தை மு.க.ஸ்டாலின் மட்டும்… Read more: உதயநிதிக்கு படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை: திமுக தோல்வி குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லி மேலிடத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும்,தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளை முன்னிறுத்தி,‘கள அரசியல்’ (Cult… Read more: பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு ரஜினியிடம் மன்னிப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments