அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது, உள்ளூர் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த புதுப்பாளையம், கோதபாளையம், வஞ்சிபாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் கூட்டமாக வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் போதிய மழையின்மை, காடுகளில் நிலவும் வறட்சி போன்ற காரணங்களால் வனவிலங்குகளுக்கான இயற்கை வாழ்விடங்கள் சுருங்கி வருகின்றன. இதனால் உணவு மற்றும் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காகத் தண்ணீர் தேடி மான் கூட்டங்கள் அடிக்கடி விளைநிலங்களுக்கும், மக்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் இடம்பெயர்வது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறு காட்டை விட்டு வெளியேறும் மான்கள், அவிநாசி-கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறச் சாலைகளைக் கடக்க முயம்போது அதிவேக வாகனங்களில் அடிபட்டும்..குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பது சமீபகாலமாகத் தொடர் கதையாகி உள்ளது .
இந்நிலையில், நேற்று இரவு அவிநாசியை அடுத்த வெங்கமேடு பாரதிநகர் குடியிருப்புப் பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து வந்த மான் கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது, அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள், மான்களைக் கண்டதும் ஆக்ரோஷமாகக் துரத்தத் தொடங்கியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க மான்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையிலும் இருவேறு இடங்களில் இரண்டு பெண் மான்களை நாய்கள் சூழ்ந்து கடித்ததில் அவை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. உயிரிழந்த மான்கள் முறையே இரண்டு மற்றும் மூன்று வயதுடையவை என்று தெரியவந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் பாரதிநகர் தோட்டத்துப் பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற உள்ளூர் விவசாயிகள், ஆங்காங்கே மான்கள் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் உடனடியாக அவிநாசி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறை காவலர்கள் வெங்கடேசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இரண்டு பெண் மான்களின் உடல்களையும் மீட்ட அவர்கள் உடற்கூறாய்வு நடைமுறைகளுக்காக தெக்கலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் செந்தில் முருகன் மான்களின் உடல்களை முறைப்படி உடற்கூறாய்வு செய்தார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு மான்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வனத்துறையினரால் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “அவிநாசி சுற்றுவட்டாரக் கிராமங்களில் புள்ளி மான்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றுக்கான குடிநீர் & தீவனத் தேவைகளை வனப்பகுதியிலேயே பூர்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை. இதனாலேயே மான்கள் அச்சத்துடனும் தாகத்துடனும் கிராமங்களுக்குள் வருகின்றன.
அதேபோல் ஊராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மான்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் செயற்கைத் தொட்டிகளை அமைத்துத் தண்ணீர் நிரப்ப வேண்டும்; சாலைகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிய வகை வனவிலங்கினமான புள்ளி மான்கள் நாய்கள் கடித்தும் விபத்துகளில் சிக்கியும் தொடர்ந்து அழியும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வனத்துறை உயர்மட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒஅப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments