டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்
கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் தமிழக முதல்வருக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச…













