கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் கருணாநிதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தன்யா (48), அண்மையில் காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் நோக்கில், தனது கணவர் கருணாநிதி மற்றும் பிரதீப் என்பவருடன் இணைந்து தொழில் தொடங்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக பலரிடமும் கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
அதில் ஒரு பகுதியாக, முருகன் என்பவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் கடன் பெற்றதாகவும், பின்னர் அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2022 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் FIR எண் 15/2022 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரூ.2.5 லட்சம் தொகையை நீதிமன்றத்தில் வைப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது தோழிகளாக பழகிய மசக்காளிபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி (35), வடவள்ளியை சேர்ந்த சங்கீதா (35), ஆனைமலையை சேர்ந்த சந்தியா (27) ஆகியோர் தனது கடன் பிரச்சினையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தன்யா குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்கள் தனது வீட்டின் உரிமையாளர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர், பள்ளியில் பணிபுரியும் சிலர் உள்ளிட்ட பலரிடமும் தன்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. “பலரிடம் பண மோசடி செய்துள்ளார்” என்று கூறி சமூகத்தில் அவதூறு ஏற்படுத்த முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆம் தேதி வெளியான தினகரன் நாளிதழில் வெளியான செய்தி மற்றும் புகைப்படத்தை காட்டி தன்னை மிரட்டியதாகவும், குடும்பத்தினரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தன்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சங்கீதா, கலைச்செல்வி, சந்தியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், செய்தித்தாளை முகத்தில் வீசி அவமதித்ததுடன், “குடும்பத்தோடு தூக்கிட்டு சாவு” என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்பிறகு மாலை நேரத்தில் மணிகண்டன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவதூறாக பேசியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பணம் தர முடியாவிட்டால், உனக்கு பணம் தர வேண்டியவர்களிடம் படுத்து கடனை அடைத்துக்கொள்” என்று அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தன்யா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களால் கடும் மன அழுத்தத்திற்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை மிரட்டிய மற்றும் அவதூறு பரப்பியவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம்… Read more: ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்
வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments