கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் கருணாநிதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தன்யா (48), அண்மையில் காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் நோக்கில், தனது கணவர் கருணாநிதி மற்றும் பிரதீப் என்பவருடன் இணைந்து தொழில் தொடங்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக பலரிடமும் கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
அதில் ஒரு பகுதியாக, முருகன் என்பவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் கடன் பெற்றதாகவும், பின்னர் அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2022 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் FIR எண் 15/2022 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரூ.2.5 லட்சம் தொகையை நீதிமன்றத்தில் வைப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது தோழிகளாக பழகிய மசக்காளிபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி (35), வடவள்ளியை சேர்ந்த சங்கீதா (35), ஆனைமலையை சேர்ந்த சந்தியா (27) ஆகியோர் தனது கடன் பிரச்சினையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தன்யா குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்கள் தனது வீட்டின் உரிமையாளர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர், பள்ளியில் பணிபுரியும் சிலர் உள்ளிட்ட பலரிடமும் தன்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. “பலரிடம் பண மோசடி செய்துள்ளார்” என்று கூறி சமூகத்தில் அவதூறு ஏற்படுத்த முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆம் தேதி வெளியான தினகரன் நாளிதழில் வெளியான செய்தி மற்றும் புகைப்படத்தை காட்டி தன்னை மிரட்டியதாகவும், குடும்பத்தினரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தன்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சங்கீதா, கலைச்செல்வி, சந்தியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், செய்தித்தாளை முகத்தில் வீசி அவமதித்ததுடன், “குடும்பத்தோடு தூக்கிட்டு சாவு” என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்பிறகு மாலை நேரத்தில் மணிகண்டன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவதூறாக பேசியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பணம் தர முடியாவிட்டால், உனக்கு பணம் தர வேண்டியவர்களிடம் படுத்து கடனை அடைத்துக்கொள்” என்று அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தன்யா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களால் கடும் மன அழுத்தத்திற்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை மிரட்டிய மற்றும் அவதூறு பரப்பியவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments