Trichy , May 16: திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் ! திமுக அரசின் திட்டங்களை செயற்படுத்தாவிட்டால் தமிழக சட்டமன்றம் நடைபெறாது – திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டமான பேட்டி…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று கட்சி அலுவலகத்தில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ராதாகிருஷ்ணன் கூறும்போது….
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் வாபஸ் பெற்றுள்ளார். இதனால் நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகர் முகத்தில் கரியை பூச வேண்டும். அதற்காக முழுமூச்சாக செயல்படுவோம்.
தேர்தலில் ஒரு மாயாஜால அலை அடித்து எதிரணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் போட்டதற்கான காரணங்கள் குறித்து அலசி ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக குழு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெற்றி பெற்றவுடன் மகளிர்க்கு உரிமை தொகையாக 2500 தருவேன் என்று கூறி விட்டு இப்போது 1000 ரூபாய் கொடுத்தால் அது சரியா ?
பேருந்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என வாக்குறுதி கொடுத்தார் அது செய்யப்பட்டதா ? கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் விஜய் நிறைவேற்றவில்லை. எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கின்றனர் குறிப்பாக காமராஜர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, ஜெயலலிதா என பல தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் சிறப்பாக செய்திருந்தாலும் அவர்களை விட மிகச் சிறப்பாக ஒவ்வொரு நாளும் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து செயல்படுத்தியவர் தலைவர் ஸ்டாலின். பெண்களுக்கான பாதுகாப்பு முழுமையாக செயல்படுத்தியது திமுக அரசு. திமுக அரசில் அறிவித்த திட்டங்கள் இப்போதைய ஆட்சியிலும் தொடரும் அப்படி நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழக சட்டமன்றமே நடைபெறாது. தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் கவர்னர் ஆட்சி தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
ஆனால் அதிமுகவின் நிலை வேறு அவர்களை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் தற்பொழுது ஆளும்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த நிலை மாறும். தலைவர் ஸ்டாலின் கூறியது போல இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் புதிய தெம்புடன் தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து ஏழு முறையாக வெற்றி பெற்றதன் ரகசியம் குறித்து கேட்டபோது.. இதுவரை நான் எந்த மக்களிடமும் ஜாதி, மத பாரபட்சம் பார்த்து பழகுவதில்லை, தொகுதியில் அனைவரையும் என் மக்களாக நினைக்கிறேன் அதுதான் காரணம் என மிக காட்டமாக அரசியல் குறித்து பேசியவர், இறுதியில் கலகலப்பாக பேசி முடித்தார்.
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
சென்னை , ஜூன் 13 : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்தடை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கான காரணங்கள் குறித்தும் அதனை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரப்பூர்வ விளக்கங்களை… Read more: தமிழகத்தில் மின்தடைக்கு ஓவர்லோடு மற்றும் நிலத்தடி கேபிள்கள் சேதமே காரணம்: மின்வாரியம் விளக்கம்
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை செப்பறை அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும்… Read more: செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments