கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த “பிரபஞ்சம் அமைதி ஆசிரமம்” எனும் தனியார் ஆசிரமத்தில் தங்கி படித்து வரும் இரண்டு பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி அருகே நெல்லெகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் யஷ்வந்த் மற்றும் சொக்கம்பாளையம் காந்திஜி ஹையர் செகண்டரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ரித்திக்ராஜ் ஆகியோர், “பிரபஞ்சம் அமைதி ஆசிரமம்” என்ற தனியார் ஆசிரமத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், எட்டாம் வகுப்பு மாணவியிடம் ரித்திக்ராஜ் காதல் தொந்தரவு செய்ததாகவும், யஷ்வந்த் அதற்கு தூதுவராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் அண்ணன், மேற்கண்ட இரு மாணவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியினர் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல கருமத்தம்பட்டியில் உள்ள காவல் நிலையத்திலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அடி வாங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்திருந்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில் ..
ரித்திக்ராஜின் தாய் காவியா கூறியதாவது: “2023-ஆம் ஆண்டு அரசு மற்றும் குழந்தைகள் நலக்குழு (CWC) அனுமதியுடன் என் மகன், மகளை ஆசிரமத்தில் சேர்த்தேன். பின்னர் மகனை வீட்டுக்கு அழைத்து வந்தேன். பரீட்சை விடுமுறையின்போது இரண்டு மாணவர்கள் சேர்ந்து என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர்.ஆனால் இந்த சம்பவத்தை ஆசிரம நிர்வாகம் என்னிடம் மறைத்து, ரகசியமாக மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது. நான் தொடர்ந்து விசாரித்தும் உண்மையை சொல்லாமல் ஏமாற்றினர். மேலும், என் மகனை ‘உங்கள் அம்மாவிடம் சொல்லாதே’ என்று மிரட்டியதும் பின்னர் தெரியவந்தது.
சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது. புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என குற்றம் சாட்டினார். மேலும், “புகார் கொடுத்தால் உங்கள் மகன் மீது POCSO வழக்கு போடுவோம் என்று மிரட்டினர். என் மகன் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் அவனை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். ஏழைகள், மாற்றுத் திறனாளிகள் என்பதால்தான் எங்களை அவமதிக்கிறார்கள். என் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்,” என்று கண்ணீருடன் காவியா தெரிவித்தார்.
.யஸ்வந்தின் தாய் சங்கீதா கூறியதாவது: எனது மகன் பெயர் எஸ்வந்த் இந்த ஆசிரமத்தில் தான் படித்து வந்தான். இந்த நிலையில் அங்கு இரண்டு மாணவர்கள் எனது மகனை சைக்கிள் செயின் மற்றும் ஒயர்கம்பியால் தாக்கியுள்ளனர். எனது மகனின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த ஆசிரமத்தில் இருந்து கடந்த 17ம் தேதி அன்று எனது மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆசிரமத்தினர் அனுமதிக்கவில்லை, இதனையடுத்து எனது மகனை வீட்டில் அழைத்துச்சென்று விசாரித்த பொழுது தான், எனது மகனை கடந்த 17ம் தேதி வீட்டிற்கு அனுமதிக்காத காரணம் எனக்கு தெரிந்தது .எனது மகனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. எனது மகனை அடித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். இந்த நிலையில் எங்களை விசாரித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொல்லியுள்ளனர் எனது மகனை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments