தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் – பரபரப்பின் உச்சம்

image 156

Chennai , May 8 : தமிழகத்தில் வெடித்த அரசியல் பரபரப்பு.. TVK ஆட்சிக்கு ஆளுநர் அழைப்பு தராததால் காங்கிரஸ் போராட்டம் தீவிரம்.. சென்னையில் செல்வ பெருந்தகை ஆவேசம்!

தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டம் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மிலிட் பொறுப்பாளர் கிருஷ் ஜோடங்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என். ரவி மீது கடும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

Also Read ; தவெகவின் 108 MLA-க்களும் ராஜினாமா செய்ய தயாரா? பெரும்பான்மை சிக்கலில் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. தமிழக அரசியலில் பரபரப்பு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரி கட்சித் தலைமையினர் இரண்டு முறை ஆளுநரை நேரில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது TVK மற்றும் கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுவது அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமாக மாற்றியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். “பெரும்பான்மை பெற்றவர்களை உடனடியாக ஆட்சிக்கு அழைப்பது ஆளுநரின் கடமை” என்ற கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

மேடையில் பேசிய செல்வ பெருந்தகை, “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்காமல் தாமதப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், ஆளுநர் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

சென்னை மட்டும் அல்லாமல் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருவதால், TVK ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த அரசு யார் அமைக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளுநரின் முடிவு இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *