நாளை வெளியாகும் மின்வாரிய வெள்ளை அறிக்கை: வெளிச்சத்துக்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? மின்துறை ரகசியங்கள் அம்பலமாகுமா?

சென்னை  ,ஜூன் 23: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த ஐந்து ஆண்டுகால ஒட்டுமொத்த நிதிநிலை ,திட்டப்பணிகள் ,மின் சாதனங்கள் கொள்முதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை நாளை அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் வெளியாகிறது.சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நாளை காலை பத்து முப்பது மணி அளவில் நடைபெறும் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் சட்ட மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இந்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார்.

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

மின்துறையின் உட்கட்டமைப்பு ,நிதி ஆதாரம் ,மனிதவளம் ,நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ,வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான விபரங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாக இடம்பெறவுள்ளது.

மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களை வெளிப்படையாக மக்கள் முன் வைக்கும் நோக்கில் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிக்கை அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக முந்தைய காலகட்டங்களில் மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடிவுகள் ,மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இதில் இடம்பெறுகின்றன.இது மின்வாரியத்தின் உண்மையான நிலையைத் துல்லியமாக விளக்கும் ஒரு முக்கியப் பதிவாகும்.

கல்பாக்கம் பதறவைத்த சம்பவம்! இயற்கை உபாதைக்குச் சென்ற சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை !

தனியார் பள்ளி கட்டணம் குறித்து வெளியான உயர் நீதிமன்றம் அதிரடி அப்டேட்

இந்த வெள்ளை அறிக்கையின் மிக முக்கிய அம்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்குத் தேவையான தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் உள்ள நடைமுறைகள் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன.மேலும்  மின்மாற்றிகள் எனப்படும் டிரான்ஸ்பார்மர்கள் ,மின் கம்பிகள் ,மின்கம்பங்கள் மற்றும் மின்சார விநியோகத்திற்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய உபகரணங்கள் வாங்கியதில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின் சாதனங்கள் கொள்முதலில் பல்வேறு முறேகீடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பலமுறை செய்தியாளர் சந்திப்புகளில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் ,நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்முதல் விலைகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் நாளை முழுமையாக பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளன.டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக விதிகள் தளர்த்தப்பட்டனவா என்பது குறித்த அனைத்து உண்மைகளையும் இந்த அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்.

அதேபோன்று மின்சார வாரியத்தில் நிலவி வரும் மனிதவளப் பயன்பாடு மற்றும் பணியிட நியமனங்கள் குறித்த விபரங்களும் இந்த அறிக்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.கடந்த காலங்களில் மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறையான தகுதி ,திறமை மற்றும் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் ,நியமனங்களில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாகவும் புகார்கள் தொடர்ச்சியாக எழுந்தன.இதனைத் தொடர்ந்து தற்போதைய மனிதவளத் தேவை என்ன ? காலிப் பணியிடங்களின் உண்மையான நிலை என்ன “கடந்த கால நியமனங்களில் நடந்த உண்மை நிலவரங்கள் என்னென்ன? என்பது குறித்த முழுமையான கணக்கெடுப்பு இந்த அறிக்கையின் மூலம் விளக்கப்படவுள்ளது.இது மின்வாரிய நிர்வாகத்தில் உள்ள மனிதவளக் குறைபாடுகளைக் களைந்து எதிர்கால சீர்திருத்தங்களுக்கு மிக முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இதனால் வாரியத்திற்கு ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமை குறித்தும் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.

மின்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் இந்த வெள்ளை அறிக்கையில் விரிவான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிய மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானம் ,துணை மின் நிலையங்களின் தரம் உயர்த்துதல் ,மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பணிகளுக்காகச் செய்யப்பட்ட செலவினங்கள் மற்றும் அவற்றின் மூலமாகக் கிடைத்த வருவாய் ஆகியவற்றை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.மின்சார வாரியத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி ,மற்றும் விநியோகப் பாதைகளில் ஏற்படும் தொழில்நுட்ப இழப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்கான காரணங்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையான மின்வெட்டுக்கான உண்மையான காரணங்கள் இந்த அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.தொழில்நுட்பக் கோளாறுகள் ,நிலக்கரி தட்டுப்பாடு ,மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவற்றில் எது மின்வெட்டிற்கு முதன்மைக் காரணியாக இருந்தது என்பது குறித்த துல்லியமான விளக்கங்கள் இதில் இடம்பெறவுள்ளன.இதன் மூலம் இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்குக் கையாள வேண்டிய உத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு மாற்றங்களை மின்வாரியம் திட்டமிடவுள்ளது.நுகர்வோர் சேவை மேம்பாடு மற்றும் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிப்பற்றாக்குறையைக் குறைத்து அதனை லாபகரமான மற்றும் திறமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்றுவதற்கான எதிர்காலத் திட்டங்களுக்கும் இந்த வெள்ளை அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நாளை காலை பத்து முப்பது மணிக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இந்த அறிக்கையை வெளியிட்டவுடன் மின்வாரியத்தின் உண்மையான நிதி நிலைமையும் ,கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஒட்டுமொத்த செயல்பாடுகளின் பின்னணியும் முழுமையாகத் தெரியவரும்

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *