அரக்கோணம் ரயில்வேயில் அதிரடி மறுகட்டமைப்பு.. 13 EMU ரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் ரயில்வே – யார்டு பகுதியில் ரூ. 54 கோடியில்
மறுகட்டமைப்பு பணிகள்; 13 மின்சார ரயில் சேவையில் மாற்றம் !
பயணிகள் ஒத்துழைப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்..

image 347

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, சுமார் ரூ.54 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ரயில்
நிலையத்திற்குள் புளியமங்கலத்தில் இருந்து நான்கு வழி பாதை ஏற்படுத்தப்படுகிறது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் காலதாமதம் இன்றி குறித்த நேரத்திற்கு நடைமேடைக்கு வந்து செல்லும். எனவே, பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
அதேபோல் நடைமேடை 1ஏ, 6, 7 ஆகியவை வழியாக புறநகர் மின்சார ரயில்களும் மற்றும் 1, 2 ஆகிய நடைமேடைகள் வழியாக விரைவு, அதிவிரைவு ரயில்களும் மற்றும் 3,4,5 ஆகிய நடைமேடைகள் வழியாக திருத்தணி வழியாக வரும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களும் தடையின்றி இயக்கப்பட உள்ளது. இதற்காக, ரயில்வே யார்டு பகுதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also read : TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

இதன் காரணமாக,இரவு மற்றும் பகல் நேரங்களில், தேவையான நேரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் அரக்கோணம் – திருத்தணி மற்றும் அரக்கோணம் – திருவாலாங்காடு இடையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
மே 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நாகர்கோயிலில் இருந்து அரக்கோணம் வழியாக மும்பை செல்லும் விரைவு ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வராமல் மேல்பாக்கம் வழியாகவே செல்லும்.

அதேபோல்,13 புறநகர் மின்சார ரயில்கள் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் அரக்கோணம் – திருத்தணிக்கு வராமல் திருவாலாங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் 5 புறநகர் மின்சார ரயில்கள் திருவலாங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு காலை நேரங்களில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் எனவும்
தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புறநகர் மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »