நெல்லை ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பை உறுதி செய்த அதேவேளையில் ,சர்ச்சைக்குரிய ஆவணம் செல்லாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

வழக்கின் பின்னணி விபரம் வருமாறு: நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு ஆறுமுக நயினார் என்பவர் விலைக்கு வாங்கியிருந்தார். இந்த நிலையில் ,அதே நிலத்தின் ஒரு பகுதியை பொன்னம்மாள் என்பவர் தனது மகன் துரைபாண்டி என்பவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு தானமாக எழுதி வைத்ததாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது
இது குறித்து அறிந்த ஆறுமுக நயினார் ,நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் முறைப்படி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ,பொன்னம்மாள் தனக்குச் சொந்தமான பங்கை ஏற்கனவே கடந்த 1963 ஆம் ஆண்டிலேயே வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துவிட்டது தெரியவந்தது. தார்மீக ரீதியாக தனக்கு உரிமையே இல்லாத நிலத்தை ,2008 இல் அவர் தனது மகனுக்கு தானமாக எழுதி வைத்தது சட்டப்படி போலி ஆவணம் என்பது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ,நில மோசடியில் ஈடுபட்டதாக துரைபாண்டி மீது காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி துரைபாண்டியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அந்த போலி ஆவணத்தில் துரைபாண்டி நேரடியாக கையெழுத்திடவில்லை என்றும் ,அதன் மூலம் அவர் எந்தவித உரிமையையும் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவரை விடுவிப்பதாக அறிவித்தது.
கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ,நிலத்தின் உரிமையாளரான ஆறுமுக நயினார் நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று தனது இறுதி தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில் ,துரைபாண்டியை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். அதே நேரத்தில் ,ஆறுமுக நயினாரின் நிலத்திற்காக பொன்னம்மாள் எழுதி வைத்த ஆவணம் முற்றிலும் போலியானது என்று நீதிபதி பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் ,இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட துரைபாண்டியோ அல்லது வேறு நபர்களோ அந்த நிலத்திற்கு எந்தவொரு உரிமையையும் கோர முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி ,அந்த ஆவணத்தை செல்லாததாக அறிவித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இளங்குளம் பகுதியில் நிலவி வந்த நீண்ட நாள் நில விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.








