சென்னை ஜூன் 4: தமிழக அரசின் சட்டத் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அத்துறையின் முதல் பெண் செயலாளராக திருமதி ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு செய்தி வெளியீட்டு எண் 165 மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த திரு.சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த மே 31 2026 அன்றுடன் தனது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வினால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருமதி ப.சுமதி இதற்கு முன்பு மாநில சட்ட ஆணையத்தின் (State Law Commission) முழுநேர உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.சட்ட நிர்வாகம் மற்றும் ஆணையப் பணிகளில் இவருக்கு இருக்கும் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் தற்போது சட்டத் துறையின் மிக உயரிய பதவியான செயலாளர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 02 2026 முதல் இவர் இப்புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ALso read : சென்னை மின்வாரிய தலைமையகத்தில் ரகசிய ஆவண ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!
நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழக சட்டத் துறையின் தலைமைப் பொறுப்பை அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி அலங்கரிப்பது இதுவே முதல் முறையாகும்.நிர்வாகத் துறையிலும் சட்டத்துறையிலும் பெண்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி ப.சுமதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை மின்வாரிய தலைமையகத்தில் ரகசிய ஆவண ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (மின்வாரியம்) தலைமை அலுவலகத்தில்,டெண்டர் மற்றும் நிலக்கறி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய பத்துக்கும் மேற்பட்ட கணினி ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) மாயம் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த துணிகர திருட்டு சம்பவம் தொடர்பாக சென்னை சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டு,காவல்துறையினர் தங்களது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். More…








