முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : RTE, இருமொழிக் கொள்கையில் உறுதி முதல்வர் சந்தித்த பின் சம்சீர் அகமது பேட்டி

image 392

CHennai, May 18:முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : மாணவர் சங்க கோரிக்கைகள், அரசு பள்ளி வசதிகள், RTE, இருமொழிக் கொள்கை குறித்து முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக சம்சீர் அகமது தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முதல்வர் விஜயை சந்தித்த நிலையில், அந்த சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இருமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை (NEP), அரசு பள்ளி அடிப்படை வசதிகள், பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் விஜய் அளித்ததாக கூறப்படும் உறுதிமொழிகள் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளன.

மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சம்சீர் அகமது செய்தியாளர்களிடம் பேசியபோது, மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். அதில் முக்கியமாக அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வர் சாதகமான பதில் அளித்ததாக கூறினார்..

ALso read : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் இருக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொள்வோம் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என சம்சீர் அகமது தெரிவித்தார்.பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து சம்சீர் அகமது கூறுகையில், “பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்தில் எடுத்துள்ளார். அதுகுறித்து பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்” என்றார்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் ஜனநாயக பேரவை தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக தனி குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்தியதாகவும், உரிய துறைகள் மூலம் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

RTE மற்றும் மாணவர் உணவுப்படி விவகாரம்

RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு தடையின்றி ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மாணவர் அமைப்புகள் வலியுறுத்தின.“இந்த ஆண்டு முதல் RTE ஒதுக்கீடு முறையாக கிடைப்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் தெரிவித்தார்” என சம்சீர் அகமது கூறினார்.மேலும் அரசு மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான தினசரி உணவுப்படி உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருமொழிக் கொள்கை தொடர்பான விவாதம் அமைந்தது.புதிய கல்விக் கொள்கை மற்றும் மூன்றுமொழிக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் சர்ச்சை நிலவி வரும் சூழலில், “இந்த அரசின் கொள்கை இருமொழிக் கொள்கை தான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை” என்று முதல்வர் தெளிவாக கூறியதாக சம்சீர் அகமது தெரிவித்தார்.

மேலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு தற்போது இல்லை என்றும், மாநில கல்விக் கொள்கையை மீண்டும் ஆய்வு செய்து அமல்படுத்துவது குறித்து பரிசீலனை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1176

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »