நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்…

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டண ஆர்ப்பட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக, நெல்லை மேற்கு மாவட்ட திமுக மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகம்பெல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி புதிதாக இணைந்துள்ள மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை, மாநகர செயலாளர்கள் சுப்பிரமணியன், தினேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஞானதிரவியம், பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணிக்கட்சியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »