
சிறப்பு செய்தி , May 15: பெட்ரோல் டீசல் விலை உயர்வு : “Save Fuel” என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்திய சில நாட்களிலேயே, டெல்லி முதல் சென்னை வரை பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருப்பது நாடு முழுவதும் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரதமர் Narendra Modi சமீபத்தில் இந்தியர்களுக்கு “Save Fuel” என்ற மந்திரத்தை வழங்கி எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் எரிபொருள் விலை உயர்ந்திருப்பது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், petrol, diesel பயன்பாட்டை குறைக்க metro, electric bus, public transport போன்ற மாற்று வழிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதோடு private virtual meetings மற்றும் work from home போன்ற நடைமுறைகளும் fuel saving-க்கு உதவும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவுறுத்தல் அப்போது ஒரு சாதாரண energy conservation appeal ஆக பார்க்கப்பட்டாலும், தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பின்னணியாக அது மீண்டும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் மே 12ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் Hardeep Singh Puri முக்கிய விளக்கமொன்றை வழங்கியிருந்தார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் supply management பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார். “நாட்டில் 60 நாட்களுக்கு தேவையான crude oil கையிருப்பில் உள்ளது. அதேபோல் 60 நாட்களுக்கு LNG மற்றும் 45 நாட்களுக்கு LPG இருப்பு உள்ளது. எனவே supply side-ல் எந்த சிக்கலும் இல்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் மக்கள் மத்தியில் தேவையற்ற panic உருவாக்க வேண்டாம் என்றும் பிரதமர் கூறிய கருத்துகளை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் இதே உரையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் financial pressure குறித்தும் அமைச்சர் வெளிப்படையாக பேசியிருந்தார். “எண்ணெய் நிறுவனங்கள் தினமும் சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. Under-recovery மட்டும் சுமார் 1.98 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும். Nearly 2 lakh crore pressure உள்ளது” என்ற அவரது கருத்து தற்போது fuel price hike விவாதத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் petrol விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்து தற்போது 97.77 ரூபாயாக உள்ளது. Diesel விலையும் 3 ரூபாய் உயர்ந்து 90.67 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் petrol விலை 3.29 ரூபாய் உயர்ந்து 108.74 ரூபாயாக மாறியுள்ளது. Diesel விலை 3.11 ரூபாய் உயர்ந்து 95.13 ரூபாயாக உள்ளது. மும்பையில் petrol விலை 3.14 ரூபாய் உயர்ந்து தற்போது 106.68 ரூபாயாக விற்கப்படுகிறது. அதேபோல் diesel விலை 3.11 ரூபாய் உயர்ந்து 93.14 ரூபாயாக உள்ளது.
தமிழக தலைநகர் சென்னை மக்களும் இந்த உயர்வால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் petrol விலை லிட்டருக்கு 2.83 ரூபாய் உயர்ந்து தற்போது 103.67 ரூபாயாக உள்ளது. Diesel விலை 2.86 ரூபாய் உயர்ந்து 95.25 ரூபாயாக மாறியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிரமத்தில் இருக்கும் நடுத்தர மக்கள் மற்றும் தினசரி பயணிகள் மீது இந்த fuel price hike கூடுதல் சுமையாக பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் petrol விலை 3.21 ரூபாய் உயர்ந்து 106.17 ரூபாயாக உள்ளது. Diesel விலை 3.11 ரூபாய் உயர்ந்து 94.10 ரூபாயாக மாறியுள்ளது. ஹைதராபாத்தில் petrol விலை 3.39 ரூபாய் உயர்ந்து 110.89 ரூபாயாக சென்றுள்ளது. Diesel விலை 3.26 ரூபாய் உயர்ந்து 98.96 ரூபாயாக உள்ளது. லக்னோவில் petrol விலை 2.85 ரூபாய் உயர்ந்து 97.58 ரூபாயாகவும் diesel விலை 3.1 ரூபாய் உயர்ந்து 90.87 ரூபாயாகவும் உள்ளது.
இந்த fuel price hike வெறும் எண்ணெய் விலையேற்றம் என்ற அளவுக்கு மட்டும் பார்க்கப்படவில்லை. இந்தியாவில் transport cost உயர்ந்தால் அதன் தாக்கம் காய்கறி முதல் logistics வரை அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் தினசரி இருசக்கர வாகன பயன்பாடு அதிகமாக இருப்பதால் petrol price increase நேரடியாக middle class மற்றும் working population மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.








