வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்…
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டண ஆர்ப்பட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக, நெல்லை மேற்கு மாவட்ட திமுக மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகம்பெல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி புதிதாக இணைந்துள்ள மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை, மாநகர செயலாளர்கள் சுப்பிரமணியன், தினேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஞானதிரவியம், பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணிக்கட்சியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை , June 7 : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதோடு, விவசாயிகளையும் வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகமது யூனூஸ் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), மு.செந்தில்செல்வன் (சீர்காழி) ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில்… Read more: தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மயிலாடுதுறையில் எம்.பி.ஆர்.சுதா குற்றச்சாட்டு
பெரியகுளம் , June 6: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் புதிய… Read more: அண்ணாமலை அமித்ஷாவின் ஒரு மாய மான்: பெரியகுளத்தில் கி.வீரமணி விமர்சனம்
நெல்லை,ஜூன் 6: நெல்லை பேட்டை பகுதியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.நெல்லையில் அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்… Read more: நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 50 வயது நபர் போக்சோவில் கைது
கோவை , ஜூன் 6: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதே தமிழக வெற்றி கழக அரசின் முதன்மை லட்சியம் என்றும் அண்டை மாநில எல்லைகள் மற்றும் உள்வட்டாரப் பகுதிகளில் உள்ள போதைப்பொருள் விநியோகச் சங்கிலி மிக விரைவில் முழுமையாக உடைக்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் தற்போதைய அரசின் அதிரடி சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக… Read more: டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு தடுப்பு: அரசு கஜானாவிற்கு ரூ.1,200 கோடி வருவாய் – அமைச்சர் விக்னேஷ்
கோவை , ஜூன் 6: ‘ஏழாவது சொர்க்கம்’ என்று பரவலாக அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு, உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், இதமான காலநிலை ஆகியவற்றுடன் கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சி முனை, தலனார் காட்சி முனை, பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இங்கு வரும் பயணிகளைக் கவரும் முக்கியப் பகுதிகளாக விளங்குகின்றன. தற்போது வால்பாறை மற்றும்… Read more: வால்பாறையில் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்…