news desk

news desk

வீடு கட்ட இலவச மணல் கேட்டு குவாரி உரிமையாளரை மிரட்டிய விவகாரம் ! உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் இருவர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: ஏப்ரல் 02, 2026 ; நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் சீவலப்பேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலாமடை கிராமத்தில் சுந்தரராஜன் ப்ளு மெட்டல் என்ற பெயரில் எம்.சான்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தாழையூத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன்…

முறையான ஆவண பரிமாற்றம் மூலம் நிறுவனத்தை வாங்கிய தன்னிடம், பணம் பறிக்கும் நோக்கில் கூலிப்படை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்த துபாய் தொழிலதிபர்

திருநெல்வேலி ; மார்ச் 27​, 2026 திருச்சியை சேர்ந்த சிவகாமி என்பவர் கடந்த வாரம் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அபுதாபி மின்வாரிய துறைக்கு தேவையான சர்வீஸ் பணிகளை செய்யும் நிறுவனத்தை தனது கணவர் ரவி நடத்தி வந்தார். அதை கவனித்துக் கொண்டிருந்த தன் மகளையும் நிறுவனத்தில்…

எரிந்த காரில் கருகி கிடந்த 4 உடல்கள் ; தொழில் நஷ்டத்தால் தற்கொலையா ! சிசிடிவி மூலம் காரின் பதிவெண் தேடும் காவல்துறை..

திசையன்விளை, மார்ச் 17, 2026;திசையன்விளையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் 1 லிட்டர் தண்ணீர் கேன்கள் 3, அதேபோல் 1 மதுபாட்டில் கிடந்துள்ளது. அதில் 1 பாட்டிலில் மட்டும் பாதியளவு தண்ணீர் இருந்துள்ளது. காரில் உள்ள 4 உடல்களும் ஒரே குடும்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.…

ரம்ஜான் எதிரொலி மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை..

திருநெல்வேலி, மார்ச் 17, 2026 ;ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுவதால் வியாபாரிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் செயல்படும் கால்நடை சந்தை, தென் மாவட்டங்களில்…

திசையன்விளையில் பயங்கரம் ! எரிந்த காரில் 4 பேர் கருகிய நிலையில் மீட்புகொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை, மார்ச் 17, 2026;நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளத்திலிருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் உள்ள பனங்காடு பகுதியில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த காரில் 4 பேர் கருகிய உடல்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வயல்வெளிக்கு சென்றவர்கள், பனைமரத்தடியில் கார் ஒன்று முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக…

பிட் அடிக்க ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்துத் தந்தால் கடும் நடவடிக்கை ! கடைகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி எச்சரிக்கை ; மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 19,835 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

திருநெல்வேலி – மார்ச் 02, 2026; தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 19,835 மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.73 தேர்வு மையங்கள்நெல்லை மாவட்டத்தில் மாணவர்களின் வசதிக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில்…

ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்ட ஆணையம்…

திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுதிருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும், வெடிகுண்டு தடுப்பு புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்…

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் வரும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – சசிகலாவின் புதிய கட்சி குறித்து டிடிவி தினகரன் பேட்டி

திருநெல்வேலி: பிப்ரவரி 24,2026“திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள்”: பதர்களால் பாதிப்பில்லை சசிகலாவை மறைமுகமாக சாடிய டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி!ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா புதிய கொடியை அறிமுகப்படுத்தி, விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

திமுக ஆட்சியில் 2500 கோடி வரை நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் ஊழல் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி – பிப்ரவரி 24,2026 ; அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய டி.டி.வி. தினகரன், அவர் மீது தமக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். ஓபிஎஸ் எந்தக் கட்சியில் இணைவது அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை என்றும், அவரைப் பற்றி தான்…

“கா – தி ஃபாரஸ்ட்”காட்டின் நடுவே பதுங்கியிருக்கும் அபாயம் ! திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து.

சென்னை : பிப்ரவரி 19,2026 ; வனவிலங்கு ஆய்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ‘கா – தி ஃபாரஸ்ட்’. அடர்ந்த காட்டுக்குள் ஒரு முக்கிய ஆய்வுப் பணிக்காக செல்லும் விலங்கியல் ஆராய்ச்சியாளரின் பயணம் தான் படத்தின் மையக்கரு.காட்டின் ஆழப்பகுதிக்குள் செல்வதன் பின்னர், இயற்கையின் எதிர்பாராத சீற்றங்களும், மர்மமான மனிதர்களின் அச்சுறுத்தல்களும் அவரைச்…

Translate »